தூயவளே !
தொடர்ந்து உன் தொடர்பில் இருந்திட
தகவல் தந்திடவே திக்கி திக்கி தவிக்கின்றேன்
இருந்தும்,துள்ளல் சந்தோஷ நதிக்கு மடையாய்
தளர்வில்லா குதூகலத்திற்கு தடையாய்
ஒட்டுமொத்தத்தில் உனக்கு தொந்தரவாய்
இருந்திட கூடாதெனகருதி தவிர்த்தும்
துடித்து தவித்தும் வருகிறேன் !
உனக்காக !