கண்டது மாயமோ என்னும் வகையில் கருத்த கண்ணாடியை மீறி தகதகத்த அந்த விழிகள் ... சந்தம் அடைந்திருந்தது ....
எஸ் ... டெல் மீ ...
ஒரு கோபத்தை இவளவு சீக்கிரம் அடக்குபவள் என்றால் ... மனக் கட்டுபாடு அதிகம் இவளுக்கு என்று மனதுள் நினைத்த வண்ணம் ... அவளுக்கு ஆங்கிலம் புரிகின்ற சந்தோசத்தில் ....
"மன்னித்து கொள்ளுங்கள் ... நான் இந்த பகுதிக்கு புதிது மாற்றலாகி வந்துள்ளேன் .. சரியான அறிமுகம் இல்லை இந்த நாடு எனக்கு ... வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது .... இது வரை வேற பகுதியில் வேலை செய்தேன் ... இங்கு மாற்றலாகி இரண்டு நாட்கள்தான் ஆகின்றது ... இங்கு குடிவர வீடு பார்த்து கொடுப்பதாக என் நண்பன் ஒருவன் சொல்லி இருந்தான் ...அவன் வர சொன்ன இடம் இந்த தரிப்பிடத்தில் இறங்கி அருகில் உள்ள கோப் (coop ) என்ற கடை அருகில் ... எனக்கு எங்கே என்று தெரியவில்லை தயவு செய்து எங்கே என்று சொல்லுவீர்களா ...? "
மட மடவென்று எங்கே அவள் தப்பாக நினைக்க போகின்றாளோ என்ற எண்ணத்தில் தன தேவையை அவசரமாக சொல்லி முடித்தான் கௌதம்....
"ஒஹ்... இப்டியே லெப்ட்ல திரும்பி நேராக போனால் ஒரு காப்பி ஷாப் வரும் ... அதுக்கு ரைட் சைட்ல திரும்பினால் கோப் ... "
"ஒஹ்ஹ... தேங்க்ஸ் ... ஹவே நைஸ் இவினிங் மேடம் ... bye ...."
சொல்லிவிட்டு அவசரமாக திரும்பி நடந்தான் ... எங்கே நின்று பேசினால் தன்கூட பேசுவதற்காக இவன் பெய் சொல்லுவதாக நினைக்க தோன்றி விட்டால் .....
"ஓகே bye .."
அவளது விடைபெறல் காற்றோடு அவன் காதுகளை துளைத்தது ... திரும்பி பார்க்க எண்ணிய மனதை அடக்கி விரைந்தான் அவன் நண்பனை தேடி ...
*****
தூரத்திலேயே கௌதம் வருவதை கண்ட அவன் நண்பன் விரைந்து அருகில் வந்தான் ...
"ஹாய் மச்சான் .. ஏனடா லேட் பண்ணிட்டே ... வா சீக்ரம் .... வீடு எங்க வீட்டுக்கு அடுத்த தெரு தாண்டா ... ஆனா எங்க வீட்டு பால்கனி ல இருந்து பார்த்தா இந்த வீட்டு பல்கனி தெரியும் ... ஏன் வீடே தெரியும் ... வாடகை கூட அதிகம் இல்ல 700 தாண்டா ... ஒரு ரூம், ஹால்,கிட்சன் , பாத்ரூம் , ஓகே தானே உனக்கு ... தெரிஞ்சவங்க மூலமா கதைசிருகேன் .. கிடைச்சிடும் ... நீ லேட் பண்ணி வந்திருக்கே ... இங்கெல்லாம் டைம் முக்கியம் .. சீக்ரம் வா போகலாம் "
கௌதமை பேச விடாது பட படவென பேசி இழுக்கத குறையாய் அவனை இழுத்து காரில் ஏற்றிக்கொண்டு விரைந்தான் நண்பன் ....
கௌதம் மென்மையாய் சிரித்து கொண்டான் ... வெறும் இடண்டு நாள் பழகிய நண்பன் இவன் ஆனால் என்னமோ ஆண்டு கணக்கில் பழகிய சிநேகம் போல் பேசுகின்றான் ... கௌதம் மனதிலும் அதே பீலிங் தான் ... வேலை இடத்தில இரண்டு நாள் பயிற்சிக்காக இவன் இடதில்தான் அனுப்பி வைத்தார்கள் ... அப்போது பழகிய பழக்கம் ... அவப்போது போனில் பேசி கொண்டாலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றுதான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ... தன தேவையை கூறிய போது அவனே எல்லாம் ஏற்பாடு செய்வதாக கூறி .. ஏற்பாடும் செய்து விட்டான் ...
யாழ்ப்பாணம் என்று சொல்லி இருந்தான் .. இலங்கை தமிழர்கள் ... ரொம்பவே நல்லவர்களாக இருகின்றார்கள்... ஆனால் நல்லவர்களுக்குதனே சோதனை .. என்று எண்ணிய வண்ணம் ....
எப்டி இருக்கிறே மச்சான் .. சொறிடா... லேட் ஆச்சு ...ஒரு சூப்பர் பிகூர் ஒண்ண பார்த்தேண்டா ... எந்த நாடுன்னு தெரில .. ரெண்டு நாளா பாக்குறேன் ... அவகிட்டத்தான் இடம் கேட்டு வந்தேன் ... என்று இவன் சொல்லி முடிக்கு முன் ...
டேய் நீ வந்ததும் ஆரம்பிச்சுட்டியா இருக்க போறது ரெண்டு வருஷம் ... என்ஜோய் பண்ணு ... ஆனா பார்த்து மச்சான் .. எந்த பொண்ணையும் காதலிக்குறதா சொல்லி பழக்கம் வைக்காதே ... முக்கியம் நம்ம ஊரு பொண்ணுங்க ... பாவம் .
இந்தியர்கள்னாலே ஒரு மயக்கம் நம்ம ஸ்ரீலங்கா பொண்ணுககிட்ட இருக்கு ... அத பல பேர் தவறா பயன்படுத்துறாங்க ...நீ அப்டி நடக்க மாட்டேண்டு நம்புறேன் ..
என்று சொன்னவன் முகத்தில் ஒரு இருள் தெரிந்து மறைந்தது ....
ஹேய் நா அப்டி எல்லாம் இல்லைடா பார்த்தேன் சொன்னேன் அவ்ளோதான் ...அவ எந்த நாட்டு பொண்ணு .. அதுவே தெரியல்ல ... நீ வேற ...
நீ சொல்றதும் உண்மைதான் ... நம்ம ஊரு பசங்க சில பேரு இங்க வேலைக்கு வந்து பல தவறுகளை செய்திருக்காங்க கேள்விபட்டிருக்கேன் .. ஆனா நான் அப்டி ஏதும் பண்ண மாட்டேன் நம்பலாம் நீ என்றான் கௌதம் .
உடன்பாடாய் புன்னகை ஒன்றை சிந்தி விட்டு ... வீட்டுக்கு குடி வாறது பற்றி பேசினார்கள்
......
கௌதம் இற்கு வீடு பிடித்து போய்விட்டது , அதுவும் நண்பன் வீடு அடுத்த தெரு ... ரெட்டிப்பு மகிழ்ச்சி ...
அடுத்து வந்த இரு நாட்களும் அவன் விடுமுறை எடுத்திருந்தான் வீடு குடி வருவதற்காக .. அந்த வாரத்துக்கான வேலை நாட்கள் முடிவடைந்திருந்தது ... வார விடுமுறை ... என்ன பண்ணலாம் ..
ஆமாம் அந்த அழகி இங்கு எங்கயோ தான் இருக்கிறாள் ... எங்கே என்று தெரியலையே ... மனதுக்குள் அவளின் சிந்தனையை புரள விட்ட படி புதிதாய் குடி வந்த வீட்டு சோபாவில் படுத்த வண்ணம் தூங்கினான் ... கனவில் அவள் கோப விழிகள் முறைத்து பார்த்தது ....
தொடரும்....