FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on October 10, 2019, 07:18:29 AM
-
பூங்காற்றும் பூக்களும் காதலித்தால்
மகரந்த பரிமாற்றம்
மண்மீதில் புது மாற்றம்
நிலவுக்கும் கதிருக்கும் காதல் வந்தால்
இரவெல்லாம் பகலாகும்
இருட்டெல்லாம் ஒளியாகவும்
நீருக்கும் வேருக்கும் காதல் வந்தால்
செடியெல்லாம் பூ பூக்கும்
பூமரங்கள் தேன் சிந்தும்
வான் மேகம் மலையோடு காதல் கொண்டால்
தூறல் துளியாகி
புவியெங்கும் மழையாகும்
கவிதைக்கும் மொழிக்கும் காதல் மலர்ந்தால்
பல காவியங்கள் உருவாகும்
கற்பனைகள் உயிர்வாழும்
திங்களும் திரைகடலும் காதலித்தால்
🌊 அலைகடலும் விளையாடும்
அலை 🌊 அலையாய் நுறை போக்கும்
திறமைகளும் திரவியமும்
காதல் கொண்டால்
வாழ்க்கையெனும் பாதையில்
வருவதெல்லாம் மகிழ்ச்சி தரும்
தேனுக்கும் பாலுக்கும் காதல் வந்தால்
திகட்டாத சுவையூரும்
தெள்ளமுதம் போலாகும்
உலகில் எல்லாமே
காதலின் மாற்றம் தான்
அன்பின் மாற்றம் தான்
...... சிற்பி...
-
பூங்காற்றும் பூக்களும் காதலித்தால்
மகரந்த பரிமாற்றம்
மண்மீதில் புது மாற்றம்
நிலவுக்கும் கதிருக்கும் காதல் வந்தால்
இரவெல்லாம் பகலாகும்
இருட்டெல்லாம் ஒளியாகவும்
நீருக்கும் வேருக்கும் காதல் வந்தால்
செடியெல்லாம் பூ பூக்கும்
பூமரங்கள் தேன் சிந்தும்
வான் மேகம் மலையோடு காதல் கொண்டால்
தூறல் துளியாகி
புவியெங்கும் மழையாகும்
கவிதைக்கும் மொழிக்கும் காதல் மலர்ந்தால்
பல காவியங்கள் உருவாகும்
கற்பனைகள் உயிர்வாழும்
திங்களும் திரைகடலும் காதலித்தால்
🌊 அலைகடலும் விளையாடும்
அலை 🌊 அலையாய் நுறை போக்கும்
திறமைகளும் திரவியமும்
காதல் கொண்டால்
வாழ்க்கையெனும் பாதையில்
வருவதெல்லாம் மகிழ்ச்சி தரும்
தேனுக்கும் பாலுக்கும் காதல் வந்தால்
திகட்டாத சுவையூரும்
தெள்ளமுதம் போலாகும்
உலகில் எல்லாமே
காதலின் மாற்றம் தான்
அன்பின் மாற்றம் தான்
...... சிற்பி...
-
Nice Kavithai Shirpi