ஜாடை மொழியில் சிக்குண்ட ஜாம்பவான்...
வர்ணிக்க வார்த்தைகள் எல்லை என்றிருந்த தருணம், வார்த்தைகளும் தன்னை அறியாமல் கோலம் தீட்டும் பெண்மை அவளை காணும் பொழுதில்....
வராண்டா ஓரம் அவள் வீற்றிருக்க, மெல்லமாய் வீசிட்ட காற்றில் தரை தொட்டுக் கிடந்த மலரிதழ்கள் பெண்ணவளின் பாதங்கள் உரசிட காற்றே நாணத்தால் மடிந்திற்று, ஆம் மடிந்தது காற்று மட்டுமல்ல நானும் தான்...
அவளது கருவிழி என்ற சிறை வாசலுக்குள் சிக்குண்டு மீண்டிட வாதாடும் கணப்பொழுதில் உணர்ந்தேன்,
இல்லை ஆயுள் கைதியாய் இருந்திட வேண்டும் என்ற எக்கம்....
இப்படி அவள் அழகில் அரங்கேறி இருந்த நேரம் என்னவளின் இதழ் பிரிய வந்தது என்னவோ ஓரிரு வார்த்தைகள் தான், நானோ ஓராயிரம் வரம் பெற்ற உணர்வு எனக்குள்...
அவள் மேல் கொண்ட அதீத காதலில் நான் மட்டும் வீற்றிருக்கிறேன் என எண்ணிய எனது எண்ணம் அவளது ஒற்றை பார்வையில் சுக்கு நூறாய் சிதறி போனது...
விழியோர தசைகளை கருவிழிகள் உரசிட, மலரினங்கள் மொத்தமும் என்னவளின் கார்குழலை வரமென பற்றிக் கொள்ள, செவ்விதழ் ரோஜா என கண்ணங்கள் வண்ணம் கொள்ள, புருவங்களை மெல்ல சாய்த்து ஜாடை செய்தாள் " திருடா... முடங்கி கிடப்பது நீ மட்டும் அல்ல நானும் தான்" என்று...
வேவு பார்க்க வந்த வீரக் காவலனோ வெட்கித்து தலை குனிந்து பிரமித்து போனான்.. இவ்வளவு இன்பமா இந்த காதலில் என்று.... ♥️