FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on September 19, 2015, 11:14:44 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: MysteRy on September 19, 2015, 11:14:44 PM
நிழல் படம் எண் : 079
இந்த களத்தின்இந்த  நிழல் படம் MysteRyஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/079.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: thamilan on September 23, 2015, 10:32:52 AM
ஊனம் என்பது ஈனம் இல்லை
அது ஒரு சிறிய குறைபாடே
அங்கங்கள் பலமாக இருந்தாலும்
மனத்தால் அங்க ஈனமானவர்கள்  பலர் இருகிறார்கள்
கை இருப்பது சாப்பிட மட்டுமே
கால் இருப்பது நடக்க மட்டுமே  என
வாழ்பவர்களும் உலகில் இருக்கிறார்கள்


கால் இல்லாவிட்டாலும்
கை இருக்கும் வரை
 மனதில் முடியும் என்ற
நம்பிக்கை இருக்கும் வரையும்
ஊனம் ஒரு பொருட்டே இல்லை
மனிதனுக்கு

கைகள் இல்லாத மாணவி
கால்களால் பரீட்சை எழுதி
சாதனை படைக்கவில்லையா
ஒரு கதவை மூடினால்  இறைவன்
இன்னொரு ஜன்னலைத் திறந்து வைப்பான்
ஒரு அங்கம் ஊனமாக இருந்தால்
இன்னொரு அங்கத்துக்கு அதன் சக்தியும்
சேர்த்து கொடுத்திருப்பான் இறைவன்

மனிதனை இயங்க வைப்பது
நம்பிக்கையும் விடா முயற்சியுமே
இவை இல்லாவிட்டால்
எல்லா மனிதனும் ஊனமுட்டோரே

நம்பிக்கை என்பது கைகளாகவும்
முயற்சி என்பது கால்களாகவும் அமைந்தால்
எந்த சிகரத்தையும் தொடலாம்
எந்த மலையையும் தோளில் சுமக்கலாம்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: சக்திராகவா on September 24, 2015, 07:31:33 AM
மனவலிமை வழிகாட்டி
பசுமை என்ற அழகூட்டி!
குறையறியா குழந்தை போல்
சேற்றினில் சோற்றுக்காக!

இரக்கம் வைத்து உனை இன்னல்படுத்த
இதையத்தில் இடமில்லை!
ஊனம் என்று உனைச்சொன்னால்
உதிரத்தில் திடமில்லை!


உண்ண உணவு தந்தாய்
உனை யார் ஊனமென்பார்
மனிதன் உணர்வானோ
மகிழ்ச்சி எதுவென்று!

விதைகள் அறியாது
விதைப்பவன் ஊனமென்று
நீ என் மாற்றுத்திறனாளி
மன்னின் படைப்பாளி...

உனைபற்றி இன்னும் சொல்ல
என் தமிழில் வார்த்தை இல்லை
கவிஞர்கள் மத்தியில்
நான் தான் ஊனமோ........சக்தி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: PaRushNi on September 25, 2015, 12:54:52 PM
சுயமரியாதையின் எடுத்துக்காட்டு

பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் அவசியமே
பிறக்கையில் சிறகுகளின் வளர்ச்சி குறைபாடு
அவற்றை பறக்க வேண்டுமானால் தடுத்திருக்கலாம்
ஆனால் அதனின் பறக்கும் கனவை அல்ல

மானின் கால்கள் விபத்தினால்
சேதம் அடைந்திருக்கலாம்
ஆனால் அதனின் எண்ண ஓட்டம்
கால்களை விட வலிமையானவை

யாரையும் சார்ந்திராது.,
சுயமதிப்புடன் வாழ நினைக்கும்
மனிதர்களை
பாவம் என 'உச்' கொட்டாது,
தள்ளி நின்று பரிகாசம் செய்யாது,
புற வித்தியாசங்களை ஒரு பொருட்டாய் எண்ணாது..
இருத்தலே நலம்.
அவர்களுக்கு நாம் இதைவிட பெரிதாய்
என்ன செய்துவிட முடியும் ?



----கிறுக்கலுடன்
      பருஷ்ணி  :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: SweeTie on September 26, 2015, 06:44:19 AM
ஊனம் என்னடா பெரிய ஊனம்
வானம் அளவு நீ வளர்ந்திருந்தாலும்
ஞானம் உன்னிடம் இல்லை என்றால்
சாணம் போன்றவன் நீ

உச்சி முதல் உள்ளங்கால் வரை
உரசிப் பார்த்தால் எல்லாருமே ஊனர்கள்
கண்ணுக்குத் தெரியும் குறைக்கு
ஊனம் என்ற பெயர் தேவையா??

நல்லவன் மாதிரி நடிப்பவனுக்கு மனசு ஊனம்
மதுபோதையில் மிதப்பவனுக்கு நாக்கு ஊனம்
கொலைகாரனுக்கு குருதி ஊனம்
திருடனுக்கு அவன் உடம்பே ஊனம் 

நடக்க கால்கள் இல்லையென்றால்
கைகளே கால்களாகும்
ஓவியம் தீட்ட கைகள் இல்லையென்றால்
கால்கள் தூரிகை பிடிக்கும்
மனசுக்கு குறைகள் இல்லாதபோது
உடம்பு  ஞானத்தில் செயற்படும்

குறையை  ஊனம் என்று ஈனப் படுத்தும்
ஆறறிவு படைத்தவர்கள்   ஆறாம் அறிவைப்
பயன் படுத்தத் தவறியதால்
குறைகள் ஊனம் ஆகியதோ!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: NiThiLa on September 28, 2015, 11:21:13 AM
உடல் குறை இழிவல்ல
ஊனமாய் பிறத்தல் உன் தவறல்ல
தவறி நேர்ந்தாலும் அது சாபமல்ல

எளிதாய் வாய்க்கும் வெற்றி சுவை அல்ல
கடின உழைப்பின் சுவைக்கு ஏதும் இணை அல்ல

தன்னம்பிக்கை
மன  உறுதி
நேர்மை
உழைப்பு
உயர்ந்த இலக்கு
என
 
சோதனைகளை உரமாக்கி
சாதனைகள் பல அறுவடை  செய்து
வெற்றியை வியக்க வைக்கும் நீங்கள்
நல்ல மாற்றத்துக்கான திறனாளர்கள்


புலன்கள் உடல் வலுவில் இல்லை உன் மதிப்பு
செயல்களும் எண்ணங்களும் தான் அளவுகோல்

நான்கு அடியில் இருக்கும் அங்காடிக்கு போக
நான்கு சக்கர  வாகனம்

மகிழூந்தில் சென்று கடற்கரையில்
காலை உடற் பயிற்சி

கண்களில் ஒளியில்லை ஆனால்
ஓவியம் ஒளிர்கிறது

மூளை வளர்ச்சி குறைவாம்
சதுரங்கத்தில் வாகை சூடுகிறார்

எனில்
முழுமையானவர் நீங்களா? நானா ?
உங்கள் எள்ளல் பார்வை என்ன செய்து விடும்
என் தன்னம்பிக்கையை
உரக்க கூவிடு தோழா

நாளை விடியல் உனக்காக
வீறு நடை போட்டு வா தோழா
நாளை முதல் உனக்கு ஜெயமாகட்டும்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079
Post by: Software on September 28, 2015, 10:07:53 PM
கால்கள்  தவழ்ந்தாலும் என் மனம்  தளர்வில்லை என்னும்  எண்ணத்தோடு வலிமையோடு உழைக்கும் தோழரை பார்த்து என்  கண் கலங்குகிறது !!!

உடலைத் தாங்கும் வலிமை
என் கால்களுக்கில்லாதிருக்கலாம்.....
எதையும் தாங்கும் வலிமை
இதயத்துக்கிருக்கிறது!!

சூம்பியக் கால்களிருந்தும்
சோம்பியதேயில்லை...
ஒருபோதும் தனிமையில்
தேம்பியதேயில்லை

தவழ்ந்து செல்லும் நிலையிலும்
தளர்ந்து விடாமல்
தொடர்ந்து செல்கிறேன்
எதிர்படும் இன்னல்களை
கடந்து வெல்கிறேன்

வெற்றிக்கு வாழ்த்து சொல்ல
கை கொடுங்கள்....
எழ உதவும் எண்ணத்தைக்
கை விடுங்கள்...
என் தோள் சாரா சுயம்
என்றும் தரும் ஜெயம்

பிறவி ஊனம் என்பது நாம் அறியாமல் விளைந்தது.
போலியோ ஊனம் நம் அறியாமையால் விளைந்தது

தயைக் கூர்ந்து இதை
மமதையாய்க் கருதாமல்
தங்களோடென்னை
சமதையாய் கருதுங்கள்

வளைந்தது இவர்களின்
கால்களானாலும்
வளையாதது இவர்களின்
குறிக்கோள்களாக இருக்கட்டும்..

இவர்களின் சுயம் சுயமாய் முன்னேறட்டும்..
நம்மோடு சக மனிதராய் பார்ப்பதே அவர்களை மகிழ்விப்பது தான்..!