அற்றை திங்களிலே நீதியை
சற்றே பிறழ்வோடு அளித்த ,
பற்றாய் தமிழ் வளர்த்த மதுரை
பற்றி எரிய விட்டால் ஒருத்தி
இற்றை திங்களிலே நிதியும்
பற்றி பிடித்திடவே என்னி
சந்தை பொருளெனவே உடலை
சந்தியில் நிறுத்துகிறாள் ஒருத்தி
இரண்டும் நான் பார்க்க
இன்றோ ஒன்றை உணர்ந்தேனே
என்றும் பெண்ணொருத்தி வலிக்கு
ஆண்தான் காரணமோ?