நான் யாரென்று தெரியாது
தேடுகின்றேன் என்னையே
நிழல் மட்டுமே சொந்தமாய்
உலவுகிறேன் காற்றில்
அட.. இவன் யார்..மிதக்காமல் நடந்து செல்கிறானே!..
ஆனால் என் கால்களை காணோமே..
ஆஹ்..இங்கே பார் ice Cream..
சாப்பிட உதவும் கைகளை காணோமே
முதலில் வாய் இருக்கிறதா..
அடடே அதையும் காணோமே
மூச்சும் வரவில்லை..
பேச்சும் வரவில்லை
நாசியையும் காணோம் குரலையும் காணோம்..
அதோ நிற்கிறான் ஒருவன்..
இவனிடம் உதவி கேட்கலாம்..!
கேட்டு தான் பார்ப்போமே..
ஸ்வீவீவீவீ
ஆஹா... இவனை தொட முடியவில்லை..
காற்று தானா நான்
எங்கோ தொலைந்து போனேன்
எங்கோ அலைந்து திரிகிறேன்..
என்னையும் யாரேனும் தேடுவர்களா..
என்னையும் யாரேனும் நேசித்திருப்பார்களா
தனிமை கொள்கிறது
யாரேனும் என்னுடன் பேசுவார்களா..
அச்சோ இந்த நாய்குட்டி உற்றுப்பாற்கிறதே
ஹே நாய்குட்டி ..
என்னுடன் பேசுவாயா..
லொள் லொள்..
அய்யயோ.. பிடி ஓட்டம்..
எவ்வளவு காலம் தான் காற்றிலே மிதப்பது..
எனக்கென்று ஓர் கூடு கிடைக்காதா..
இருப்பினும் மனிதன் படும் பாடு திண்டாட்டம்தான்
பொறாமை வெறுப்பு வண்மம் அகந்தை..
இவ்வளவும் சுமந்து கொண்டு
எப்படி தான் வாழ்கின்றானோ.
அடுத்தவர் இருக்கட்டும் ..
நான் எப்படி தான் வாழ்ந்தேனோ😒
ஹா.. எனக்கிப்போது கிடைத்தது வரம் தான்..
It's drama time..
காற்றில் கலந்து..
மனிதர் பலர் அரங்கேற்றும் நாடகங்களை
நின்று நிதானமாய் ரசிக்கிறேன்