பள்ளி சென்று வந்தவுடன் சீருடை மாற்றி
அவசரமாக அரை வயிறு உணவருந்தி
நண்பர்களோடு விளையாடும் ஆவலில்
'அம்ம்மா நான் விளையாட செல்கிறேன்'
என வாசல்படியில் நின்று உரக்க கூறி
உற்சாகமாய் கிளம்பிய இனிய தருணங்கள்..
நண்பர்களுடன் வயல் வரப்புகளிலும்,
வரத்து கால்வாய்களிலும் உள்ள சேற்றிலும், சகதியிலும்
வேறுபாடுகள் இன்றி விளையாடிய உற்சாகமான,
தூய்மையான மனம் கொண்ட குழந்தை பருவம்.
சூரியன் சுட்டெரித்தாலும் , மழை பொழிந்தாலும்
வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை
மறந்து விளையாடிய உன்னதமான பருவம்.
எவ்வித கவலைகளும் இல்லாமல்
சிறு வயதில் நண்பர்களுடன் ஓடி
விளையாடி கழித்த பாலாக வயதின்
பசுமையான நாட்களை எண்ணி பார்க்கிறேன்.
இன்று அதை விவரிக்கும் வார்த்தைகளும் இனிக்கிறதே!
பள்ளி சென்று வந்தவுடன் சீருடை மாற்றி
அவசரமாக அரை வயிறு உணவருந்தி
நண்பர்களோடு விளையாடும் ஆவலில்
அம்ம்மா நான் விளையாட செல்கிறேன்
என வாசல்படியில் நின்று உரக்க கூறி
உற்சாகமாய் கிளம்பிய இனிய தருணங்கள்..
இன்றோ கைபேசியே உலகமாய் எண்ணி
சூரியன் உதிப்பதையோ, மறைந்ததையோ அறியாது
இனிமையான தருணங்களை வீணடிக்கிறோம்.
நிலவின் அழகை ரசிக்காது , அக்கம் பக்கம்
மறந்து கைபேசியில் வைத்தகண் மாறாமல்
கவிழ்ந்து கிடக்கிறோம்.
மகிழ்ச்சியாய் உணவு உண்பதுமில்லை.
உறவுகளுடன் கலந்துரையாடுவதும் இல்லை.
மனதை பரபரப்புடனேயே வைக்கிறது இந்த நவீன உலகம்.
உறவுகளுடன் உரையாடி , இயற்கையோடு ஒன்றி
குழந்தை போன்று கவலைகளை ஒதுக்கி வைத்து
மகிழ்வோடு வாழ்வோம்.
கள்ளம் அற்ற,கவலை அற்ற
ஆடிப் பாடும் குழந்தை பருவமே
ஓவ்வொருவர் வாழ்விலும் இனிமையான தருணம்.