உயிரான உறவென்று உறக்கச்சொல்,
அது என்னை ஈன்றெடுத்த அண்ணை அவளின் தாய்மை என்று சொல்...
கருவுற்ற கணம் முதலே, தன் கனவுகளை கலைத்து,
கனவென்று இருப்பின் அது என் சிசுவென்று நினைத்து.
துயில்கள் தொலைத்து, துக்கம் தொலைத்து.
இன்னல்கள் அனைத்தையும், இன்பங்களாய் ஏற்று.
உணவென்று உண்பதாய் இருப்பினும்,
அது என் உயிரான சிசுவிற்கு உகந்ததாய் உன்பேன் என்று.
நீ புன்னகை சிந்த, அவள் கண்ணீர் சிந்துவாள்,
நீ கண்ணீர் சிந்தினால் அவள் கருகிப்போவாள்.
உன்னை அல்லி அணைத்துக் கொள்வதே, அவளின்
ஆயுள் தவம்.
நேசம் எனும் கடலில் மூழ்கி நிற்கும் , "தன் சிசுவின் மேலான" பாசம் எனும் சுவாசம்...
கடக்கும் கணம் எல்லாம், கண்மணியின் வருகையைஎண்ணியே.
தன் சிசுவிர்காக சமரசம் செய்வதில் கூட சமரசமின்றி சகித்து கொண்டவள்,
சாகும் வரை தன் சிசுவை தன்னுள் இணைத்துக்கொண்டவள்.
இத்தனை தவங்களும், தவிப்புகளும் நிழலான உயிர்தனை கருவறையை அலங்கரித்த கண்மணியை நிஜத்தினில் காணவே......
உறவே! உன் தாயின் தியாகங்கள் அவை ஏட்டில் எழுதப்படும் என்பதற்காக அல்ல,
மாறாக மழலை உருவான நீ அவளை நிச்சயம் ஒருநாள் உன் மடிதனில் சுமப்பாய் என்றே.....
( உன் தாய் ! உனை சிரமத்துடனே பெற்றெடுத்தால், உனை சிரமத்துடனே வளர்த்தெடுத்தால், அவளை " சீ " என்று கூட சொல்லிவிடாதே.. -- Al Qur'an )...