Author Topic: பூமியின் மீது கோடுகள்  (Read 738 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
பூமியின் மீது கோடுகள்
« on: April 16, 2012, 01:34:59 AM »
உங்கள் ஊரில் உள்ள ஒரு வட்டாரத்தைக் குறிப்பிட்டு மூன்றாவது மெயினும் ஐந்தாவது குறுக்குத் தெருவும் சந்திக்கிற இடம் என்று சொன்னால் உங்களால் எளிதில் அந்த இடத்தைப் புரிந்து கொள்ள முடியும். ரோடுகளுக்குப் பதில் நம்பர் கொடுக்கப்பட்ட கோடுகளை வைத்தும் ஓரிடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த வகையில் தான் பூமி மீது கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் கற்பனையான கோடுகளை குறிப்பிட்டுள்ளனர். வடக்கு தெற்காக உள்ள கோடுகளுக்கு தீர்க்கரேகை (Longtitude) என்றும் கிழக்கு மேற்காக உள்ள கோடுகளுக்கு அட்சரேகை (Latitude) என்றும் பெயர்.
இவ்விதம் கற்பனையான கோடுகள் போடப்பட்ட மேப்புகள் அடங்கிய புத்தகம் தான் அட்லஸ் (Atlas). ஆகவே, 13.04 வடக்கு அட்சரேகையும் 80.17 கிழக்கு தீர்க்கரேகையும் சந்திக்கிற இடத்தில் இருக்கிற நகரம் எது என்று கேட்டால் அட்லஸில் நீங்கள் தென்னிந்தியாவைப் பெரிதாகக் காட்டுகிற மேப்பை உன்னிப்பாகக் கவனித்து அது சென்னை என்று கூறிவிட முடியும்.
இந்த மேப்பை நீங்கள் உற்றுக் கவனித்தால் 80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையை அடுத்து (மேப்பைப் பொருத்து) 82 டிகிரி தீர்க்கரேகைதான் காணப்படும். அட்சரேகை விஷயத்திலும் இப்படித்தான். ஆனால் சென்னை நகரின் பல பகுதிகளையும் விரிவாகக் காட்டுகிற (துல்லியமான மேப்புகளில்) 80 டிகிரிக்கும் 81 டிகிரிக்கும் இடையிலும் கோடுகள் போடப்பட்டிருக்கும்.
நிலஅளவைத் துறை (சர்வே இலாகா) என்று தனி துறை உள்ளது. ஆரம்ப நாட்களில் இந்த துறையைச் சேர்ந்த பணியாளர்களும் அதிகாரிகளும் காடு மேடெல்லாம் அலைந்து இவ்விதம் மேப்புகளைத் தயாரித்தனர். இந்த நாட்களில் செயற்கைக் கோள் மூலமே மிகத் துல்லியமாக மேப்புகளைத் தயாரித்துவிட முடிகிறது. அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
இந்தியாவும் இப்போது இவ்விதம் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறது. இந்தியா இதற்கென்றே 2005 மே மாதம் கார்ட்டோசாட்-1 என்ற செயற்கைக்கோளை வானில் செலுத்தியது. இது வானிலிருந்தபடி படங்களை எடுத்து கீழே உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்புகிறது. இது எடுக்கும் படங்களில் கீழே தரையில் உள்ள சிறிய வீடுகளும் தெளிவாகத் தெரியும். விரைவில் செலுத்தப்பட இருக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளானது தெருவில் நிற்கிற கார் தெளிவாகத் தெரிகின்ற அளவில் படம் எடுக்கும்.
தேவை என்று தோன்றினால் இந்தியா இந்த செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி உலகில் உள்ள எல்லா நாடுகளின் படங்களையும் இவ்விதம் வானிலிருந்து ஓராண்டில் எடுத்து முடித்துவிட முடியும். அவற்றைக் கொண்டு மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
இந்த விஷயத்தில் இந்தியாவின் திறன் அமெரிக்காவுக்கு இணையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமான மேப்புகளால் பல பயன்கள் உள்ளன. போர்க் காரியங்களுக்கும் இவை பயன்படும்.
கடந்த 2003 ஆண்டில் நடந்த இராக் போரின் போது அமெரிக்கா போர்க்கப்பல்களிலிருந்து கிளம்பிய குருயிஸ் ஏவுகணைகள் இராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்துறை அமைச்சக கட்டடம், பாதுகாப்பு அமைச்சகம், வேளாண் அமைச்சகம் என தனித்தனி கட்டடங்களைக் குறி தவறாமல் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணைகளில் அவை தாக்க வேண்டிய வட்டாரத்தின் துல்லியமான மேப்புகள் குறிக்கப்பட்டிருந்தன. செயற்கைக்கோள்கள் வழிகாட்ட, இந்த மேப்புகளின் உதவியுடன் அந்த ஏவுகணைகள் குறி தவறாமல் இலக்குகளைத் தாக்கின. துல்லியமான மேப்புகள் இல்லாவிட்டால் குளறுபடி ஏற்படலாம். உதாரணமாக 1999 மே மாதம் கொசாவோ போரின் போது அமெரிக்காவின் ஒரு ஏவுகணை சினத் தூதரகத்தின் மீது போய் விழுந்தது.
குறிப்பிட்ட வட்டாரத்துக்குரிய மிகத் துல்லியமான மேப்புகளை இந்தியாவில் நீங்கள் கடைகளில் வாங்க முடியாது. ராணுவ இலாகாவின் அனுமதியின்றி இவை யாருக்கும் வழங்கப்படுவது கிடையாது. ஆகவே இவ்வித மேப்புகளை வைத்திருக்கிற ஒருவர் சரியான விளக்கம் கொடுக்காவிட்டால் அவர் கைது செய்யப்படலாம். இத்துடன் ஒப்பிட்டால் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட துல்லியமான போட்டோக்களையும், இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட துல்லியமான மேப்புகளையும் அமெரிக்காவில் எளிதில் வாங்கலாம். ஆனால் இந்தியாவில் தான் பல கட்டுப்பாடுகள்.
கட்டுரைகள்
இலக்கியம்
சமூகம் - அரசியல்
பொருளாதாரம்
பொதுவானவை
தமிழ் தாயின்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்