தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
SweeTie:
பசி என்று வந்தவர்க்கு
புசிக்க கொடுப்பவன் நீ
நடுநிசி யில் பயம்தீர்க்க
ஒளிமயமானவன் நீ
நோய்க்கு மருந்தானவன் நீ
நீண்ட பயணத்தில் துணையானவனும் நீ
எங்கும் நிறைந்தவனே ! பரம்பொருளே!
உனைத் துதிக்கும் வரம் போதும்!!
அடுத்த தலைப்பு ...பரம்பொருள்
NiYa:
ஆதி நீ
அந்தம் நீ
முதலும் நீ
முடிவும் நீ
தொடக்கமும் நீ
முடிவும் நீ
யாவிலும் நீ
எதிலும் நீ
எம் பரம்பொருளே
அடுத்த தலைப்பு - நகைப்பு
KS Saravanan:
கம்பன் வீட்டு கட்டுத்தறியில்
ஏற்றிடாத கவிதைகளை
விழி மூடி நித்திய நிலையில் நீந்தி,
வானவில் வார்த்தைககளை கொண்டு
எட்டி பிடித்தேன் சில கவிதை வரிகளை...!
அதை படித்தவர்களில்...
சிலர்,
சிலர்,
இன்னும் சிலரோ,
எனக்கோ ஒரே நகைப்பு..!
அடுத்த தலைப்பு மனிதம்..!
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version