காதலனே உன்னை கண்டவுடன் ......
உன்னை நேசிக்கிறேன்
உதடுகளால் சொல்ல முடியாத வார்த்தைகள்
என் உள்ளம் ஸ்பரிசித்து கண்களால் சொல்லுகிறேன்
கண்டு கொள்வாயா ... காணமல் செல்வாயா ?
உன்னை கண்டவுடன்
வினாடி விம்மி நின்றுவிடும்
என் இதயத் துடிப்பை
உன் கண்களால்
பார்வை எனும் மின்சாரம் பாவித்து
உயிர்பித்துவிடுகிறாய்...
பாதையில் சென்று விடாதே
மின்சார தடை உன்னால் வந்துவிடும் ..
ஒவொரு கணமும் பேச துடிக்கிறேன்
ஏனோ தெரியவில்லை
உன்னை காணும்வரை
என்னுள் மோதிக்கொள்ளும்
வார்த்தை ஜாலங்கள்
உன்னை கண்டவுடன்
நிறம் கலைந்து..நிர்கதியாகின்றது ..
உன்னை நினைத்தால்
உல்லாசமாய் உலாவந்த நான்
இன்று அடிகடி
ஊமையாய் உளறுகிறேன்
சிறகுகள் விரிக்க முடியாது ...
என் காதலை உனிடம் சொல்ல முடியவில்லை
ஆனால்....
என்றாவது என் கண்களின் மொழி அறிந்து
கண்ணா உன் காதலும் என் வழி கனிந்திடாதோ ...
காத்திருக்கிறேன் ...என்றும் காதலுடன்