இது அப்துல் ரகுமான்,ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது எழுதிய, எனது மனதை தொட்ட ஒரு கவிதை
அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன
இங்கே
நான் எத்தனை விக்கட்டுக்கள் விழுந்தன? என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்
அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன
இங்கே
நாம் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கிறோம்
அவர்கள்
வேட்டையாடப்பட்டு கதறிக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் வெள்ளித்திரைக்கு முன்னால்
விசிலடித்துக்கொண்டிருக்கிறோம்
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா என
பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறோம்
அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் அதர பானம் அருந்திக்கொண்டிருக்கிறோம்
இதில்
வியர்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நான் கவரிகள்
இதோ
தேவ வேதம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன.
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரத்தில்
இன்று ஆயுதங்கள் பூக்கின்றன
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருக்கெடுத்து ஓடுகின்றன
தாய்ப்பசுவோ
கவர்ச்சி சுவரொட்டிகளை தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது