FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 20, 2020, 07:27:16 PM
-
நண்பனே
கைகளோ கால்களோ
முடங்கிப் போனதை எண்ணி
கண்ணீரும் கவலையுமாக
மூலையில் முடங்கி கிடைக்காதே
கால்கள் அற்ற மேகம் வான்முழுவதும்
தவழ்ந்து வருவதில்லையா
மழையை பெய்து
உலகை செளிர்விக்கவில்லையா
முயற்சிகள் உன்னிடம்
முடங்காமல் இருந்தால்
உயர்ச்சிகள் உந்தன்
முகவரி தேடி வரும்
உன் தோல்விக்கு காரணம்
விதியென்று சொல்லாதே
விடாமுயற்சி செய்
அதுவே வெற்றியின்
நிரந்தர மூச்சு