என் தங்கமே.. என் பல வருட வாழ்க்கை சுற்றியதே இந்த ஒரு நிகழ்வுக்காகத் தான்....
நீ என் கைகளில் தவழ்ந்திடும் தருணம் இந்த உலகமே என் வசமானது என் உயிரே..
உன் ஒற்றைப் புன்னகையில், உலகம் அர்த்தமற்று போகச் செய்கிறாய்..
உன் கன்னக் குழி அழகில், வாழ்வை முழுமை ஆக்கினாய்..
இந்த நொடி முதல் எனக்கென்று எதுவுமற்று, உனது கனவுகளை மெய்பிப்பதே என்னுடைய நோக்கம் ஆகும்..
என் கரங்களில் எத்தகு பாதுகாப்பை உணர்கிறாயோ, அத்தகு பாதுகாப்பை
காலம் முழுவதும் உனக்கு தருவதற்கான தைரியத்தை என்னுள் நான் உணர்கிறேன்..
ஒவ்வொரு மகளும் ஒவ்வொரு தந்தைக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை உன் மூலம் நான் உணர்கிறேன்..
இதே உணர்வு தான் அனைத்து தந்தைக்கும் இருக்கும் என்பதனால் இதருணத்தில் இருந்து என் மனைவியைத் தவிர அணைத்து பெண்ணையும் என் மகளாய் பார்ப்பேன் என்று உறுதி மொழிகிறேன்..
தந்தை மகள் உறவு என்பது உலகத்தில் வேற எந்த உறவைக் காட்டிலும் உயர்ந்தது மற்றும் புனிதமானது..
இந்த சமுதாயத்தில் எவ்வளவு நல்லது கெட்டது இருந்தாலும் உன்னைப் பாதுகாத்து உன் மனதிற்கு பிடித்தவாறு நீ வாழ்வதைப் பார்த்து ரசித்து..
உன் கலங்கமற்ற கண்களும் தெய்வீகச் சிரிப்பும் உன் வாழ்க்கை முழுவதும் தொடர என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் கண்மணியே..
உன் வாழ்க்கையில் நான் உன்னுடன் இருக்கும் வரை தோல்விகள் அனைத்தையும் வென்று, வெற்றி தடம் பதித்து..
உனது இதே அழகிய புன்னகையை எனது மரண படுக்கையின் கடைசி தருணத்தில் பார்த்து எனது உயிர் மூச்சு என்னை விட்டு பிரிந்தால் அதுதான் பேரானந்தம்..