ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 196
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/196..png)
தந்தை எனும் மூன்றெழுத்து
வாழ்வில் நான் கிடைக்கப் பெற்ற பேருறவு ...
தந்தை எனும் ஓருறவு
உம்மால் உணர்ந்தேன் நானும் அன்பின் உயர்வு ...
பட்டும் படாமல் விழி விரிகையில்
எம்மை பூப்போன்று கரங்களில்
ஏந்தியவர் நீரே ..
எந்தன் பாதமது பூமியில் பதியும்முன்
உங்கள் நெஞ்சினிலே தாங்கியவரும் நீரே ..
எந்தன் உதட்டோரம் புன்னகை மலர்கையில்...
உங்கள் விழியோரம் கண்ணீர் துளிர்வதேனோ ...
தகப்பன் ஆகிவிட்ட கர்வமோ ...
உங்கள் ஜீவனில் உயிர் கொண்ட உதிரம்
ஜனனம் கண்ட மகிழ்ச்சியின் உச்சமோ ...
அன்னையவர் மடியில் தவழ்ந்து
தந்தை உங்கள் தோளில் தஞ்சம் கொண்டேன் ...
தினம்தோறும் தங்கள் மார்புதனில்
நான் துயில் கொள்ள ...
தங்களின் நித்திரை மறந்தீரோ ...
நாட்டின் ராணிக்கும் இந்த பாக்கியமுண்டோ..
நம் வீட்டின் ராணியாக
என்னை தினம் தினம் அலங்கரித்து
அழகு பார்த்ததும் நீர்தானே ...
பிஞ்சு கரம் பிடித்து ...
அடிமேல் அடி வைத்து நடை
பயிற்று வைத்தவரும் நீர்தானே ...
வாழ்வின் ஞானம் கற்பித்த
மிகச் சிறந்த ஆசானும் நீர்தானே ...
என் விழியறிந்த முதல்
காதலனும் நீர்தானே ...
தாய் தந்த எந்தன் உயிருக்கு
காவலனும் நீர் தானே ...
எந்தன் விழியசைவுகளலே என் மனக்கவலை அறிபவரும் நீர்தானே ...
துயரம் சூழும் பொழுதிலும்
புன்னகை பூத்த முகத்துடன்
என்னை வரவேற்பவரும் நீர்தானே ...
அன்பின் திருவுருவம் நீர்தானே ...
கண்டிப்பின் அடையாளம் நீர்தானே ...
தியாகத்தின் விளிம்பும் நீர்தானே ..
கருவில் சுமக்காவிட்டாலும் என்னை
ஆயுள் வரை நெஞ்சில் சுமக்கும் ஓருயிர் நீர்தானே ...
என் வாழ்வில் நான் கிடைக்க பெற்ற
பெருஞ்செல்வம் நீரோ ...
உம்மிடம் ஒரு கோரிக்கை செவிமடுப்பீரோ ...
உயிர் ஜனனித்த பொழுதில் முதலில்
கையில் ஏந்தியவர் நீரே ...
எந்தன் ஆயுள் முடியும் நேரம் ...
தங்கள் மடியில் விடைபெறும் வரமொன்று தருவீரோ ...?
தெய்வத்தை கண்டதில்லை நேரில் . ..
அவரின் மருவுருவமாய் காண்கிறேன் என் பெற்றோரை ...
~ ரித்திகா ~