சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும்
ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
" உன் நினைவு "
வெறும் அழகாய் மட்டும் இருந்திருந்தால்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் நிறைந்திருந்திருப்பாய்
உயிரை வருடும் நினைவுகளாய் எங்கும் நிறைந்திருக்கின்றாய்
இயற்கையாய் இருப்பதனால் ...