FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on February 01, 2024, 02:41:38 PM

Title: பிரிவு
Post by: Mr.BeaN on February 01, 2024, 02:41:38 PM
குறிஞ்சி பூவா நெஞ்சுக்குள்ள பூத்தவளே
பிறிஞ்சி போன ஏன்னு தான் தெரியலையே
அறிஞ்சு போட்ட காயாட்டம் எம்மனசும்
கறஞ்சு போக நான் இப்போ துடிக்கிறேனே
சரிஞ்சு போன உன்னோட நெனப்பும் இப்போ
நெருஞ்சி முள்ளா என்னத்தான் குத்துதடி
நீ பரிச்சு போன என்னோட மனசும் இப்போ
மறிச்சு போன உன் காதலால் கத்துதடி