சிறுபிள்ளைகளாக இருந்த
காலங்களில் என்றுமே
மறக்க முடியாத
எத்தனை இன்பமான நாட்கள்!!..
நினைத்து பார்த்தாலே
மனதெல்லாம் இனிக்கிறது!!..
இனிய மாமரத்துச் சோலை
இயற்க்கை காட்சிகள்!
மழைச்சாரலில் நனைந்தால்
அம்மாவின் திட்டும்!
அப்பாவின் அடியும்!
அலை பாய்ந்த மனமதை
நினைத்து பார்த்தாலே
மனதெல்லாம் இனிக்கிறது!!.
மழைவெள்ளம் புகுந்ததால்
சேதமடைந்த தொழிற்சாலைகள்
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
குடியிருப்புகள் எண்ணிலடங்கா
வெள்ளம் சூழ்ந்தச் சாலைகள்!!
மெய் படகு காட்சிகள்!!!
ஓடித்திரிந்த வண்ணச் சோலை
ஒன்று மில்லாத காட்சிகள்!
எங்கு பார்த்தாலும் உரு தெரியாமல்
எல்லாமே சிதைந்த காட்சிகள்!
நினைத்து பார்த்தாலே நம்
மனதெல்லாம் கசக்கிறது!!
எல்லாமும் கூட எங்கோ
ஓடி ஒழிந்து போனாலும்
நாளையைப் பற்றி கடுகளவும்
கவலையே இல்லாத
தெளிவான மனம்!!
கள்ளமில்லாத மனம்!!
களங்கமில்லாத மனம்!!
உள்ளொன்று வைத்து
வெளியொன்று
பேசத்தெரியாத
வெள்ளை மனம்!!
நண்பர்களை மட்டுமன்றி
எவரையும் ஏற்று
எளிதாக நம்பும் மனம்!!
உயிர்போல பாவிக்கும்
மெய்யான மனம்!!
பெருமை ,வஞ்சகம், கோபம், ,
பொறாமை போக்கிரி பயம்,,
ஆசை இச்சை கவலை
அத்தனையும் அறியாத மனம்!!
அப்பா அம்மா இரு்க்கையிலே
எனக்கென்னவென
எதைப்பற்றியும்
கவலைப்படாததால் தான்
நாளையென்பதுகூட
நாளையை பற்றி கவலைப்படும்!
நல் நம்பிக்கையின் மனம்!!
சிறுபிள்ளையைப் போன்று
மனம் இறைமேல் பக்குவமானால்
கவலையென்பது இல்லை!!
எல்லையில்லா இன்பம் பெற
எங்கும் நிறைந்த பரமனிரு்க்கையிலே
எனக்கென்னவென
எதைப்பற்றியும் கவலை்ப்படாத
சிறு பிள்ளை போல் மனம் நல்க
சிந்தனைகளை செலவிடுவோம்
வாழ்க வளமுடன்.......................