அடடே,
பார்த்ததும் பிடித்துவிடும்
புகைப்படம்
எடுத்தவனுக்கு
தெரிந்திருக்கிறது
கலையின் அழகு
ஆயிரமாயிரம் பேர்
விரும்பும் ஒரு புகைப்படம்
ஆனால்
மனிதநேயம்
அவனிடத்தில் வற்றி
போயிருக்கவேண்டும்
இன்றைய அவல நிலை
இது
சாலையோர விபத்தை
படம் பிடித்து நண்பர்கள்
குழுவிற்கு
அனுப்பும்
நாம்
சாக கிடப்பவனுக்கு
திருவூர்தி அழைக்க தாமதிப்பது
அவனை கொல்வதற்கு சமம்
என அறிவோமோ ?!
அப்புகைப்படத்தை பார்க்கும்
ஒவ்வொருவருக்கும்
அச்சிறுகுழந்தை
உணர்த்திக்கொண்டே இருக்கும்
உதவி என்பது யாதென்று
அதை எடுத்தவன்
மட்டும்
விதி விலக்கோ ?!
இதை தான் எம்வள்ளுவன்
அழகாய் சொன்னான்
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
என்று
உதவி என்பது என்ன செய்கிறோம்
என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம்
என்பதும் அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம்
என்பதும் அல்ல
உதவி என்பது எப்போது செய்கிறோம்
என்பதைப் பொருத்தது
உதவி செய்ய அறிவு தேவை இல்லை
இதயம் இருந்தால் போதும்
வாருங்கள் காலத்தே உதவுவோம் !
****ஜோக்கர் ****