சற்றும் நான் எதிர் பார்க்காத..
அழகிய தருணம் இதுவன்றோ...
நீ என்னை.. இங்கு... இந்நேரம்...
வாவென அழைப்பாய் என்று..
நம் முதல் முத்தான அறிமுகம்..
என் ஆழ் மனதில் என்றுமே..
மறையாது..மாறாது... பதிந்தன...
கருங்கல்லில் கல்வெட்டென...
நீ என்னிடம் பேசிய முதல் சொல்...
இன்று.. இன்று.. வரை நான் மறவேன்...
அது உன் கோபத்தின் உச்சத்தில்..
உதிரிந்த சூடான தீ பொறியல்லவா..
ஏன்! என்மீது இப்படி ஒரு கோவம்..
ஏன்!! ஏன்!!! இப்படி ஓர் வெறுப்பு...
பல நாள் தவித்தேன்... துடித்தேன்...
நெருப்பில் விழுந்த புழுவென...
அதன் பின்னும், ஒவ்வொரு சந்திப்பிலும்..
எனை காயப்படுத்தினாய்..
உன் உஷ்ணம் கொப்பளிக்கும்..
அழகிய வார்த்தைகளால்..
அத்தருணம் எல்லாம்.. என் நெஞ்சமோ...
கடும் காற்றாற்று வெள்ளத்தில்..
சிக்கிய தவிக்கும் கூழாங்கல் என ..
பதறி.. சிதறி சில்லு சில்லாய் நொறுங்குமே...
ஆனாலும்.. உன்னையும் பிடிக்கும்..
உன் கோபமும்.. எனக்கு மிகவும் பிடிக்கும்..
உன் கோபத்தின் வேகமும் . ஆழமுமே.
உன்னை எனக்கு உணர்த்தியது.. நீ யாரெனெ...
இன்று,..
உண்மை எதுவென.. நீ உணர்த்தாய்..
உன் மனதை காயம் படுத்தியவள்.. நான் இல்லையென..
இதுவே போதும் எனக்கு. .உன் சுந்தர நேரங்களை..
கலைக்கும் காரிகை நான் இல்லையென..
நிலவின் ஒளியில்..
நிஜமறிந்த நீயோ... உன் தவறுகளை உணர்ந்து...
என் விழிகளை சந்தித்த .. உன் முதல் பார்வை..
உன் விழிகளில் வழிந்த... முதல் கண்ணீர் துளிகள்
உயிரே.. நீயே என் வாழ்வென உணர்ந்தேனடா...
விண்மீன்கள் என்னை நோக்கி கண்கள் சிமிட்டிட.
கரிய காரிருள் சூழ்... நட்ட நடு இரவில்..
வெண்ணிலாவின் ஒளியில்.. நீயும் நானும் தனியே...
உணர்த்தினாய்.. உணர்கிறேன்... உன்னுள்ளும் நான்....