என் இனிய FTC நண்பர்களுக்கு , என் முதல் கண் வணக்கங்கல். என் அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கின்றேன் ,தரமாய் ,தகுமாய் , தகுதியாய் தெரிவித்து அறிவித்துக்கொள்ள தனிதகுதிகள் ஏதுமில்லை என்பதால் அறிமுகம் தேவையில்லை என நினைக்கின்றேன். இருந்தும் தவறே ஏதும் புரியாமல் தவறாய் ,தாழ்மையாய் புரிந்துகொள்ளபட்டதால் அத்தவறான புரிதலை திருத்தம் செய்வதற்காக அல்ல தெளிவு படுத்த கடமை பட்டுள்ளேன்.
மாற்று தளத்தின் அரட்டை அறையினில் மற்றோர் போற்றும் பொருப்பினில் மட்டற்ற மகிழ்ச்சியில் மகிழ்ந்திருந்தேன் .நறும் பூங்காற்றோன்றின் அன்பு கட்டளை ஏற்று, அறிமுகம் ஆனேன் FTC அறைக்கு முன்னொரு நாள் நேற்று .நான் மாற்று அரட்டை அறையின் பயன்பாட்டாலன் என்று தெரிந்தும் யாரும் மற்றவர்களுக்கும் எனக்கும் மாற்றம் இல்லாமல்
தான் பழகினீர்கள் ,யாரும் என்னை தூற்றாமல் போற்றவே செய்தீர்கள் .அளவிடமுடியா ஆனந்தம் அடைந்தேன் .கவிதைத்தளம் ஒன்று கவின்பட கவின் சிறப்போடு செயல்படுவதை தெரிந்தேன்
நுழைந்தேன் , ஒத்த விருப்பம், கருத்து, ஆர்வம் கொண்ட தையல் ஒருவளின் அறிமுகம் கொண்டேன்
அவள் தம் கவிகளை படித்தேன் ,ரசித்தேன், ருசித்தேன் ஒவ்வொன்றும் தித்திக்கும் மலை தேன் .
நான் சுவாசிக்கும் தமிழையும், கவிதையும் அவள் நேசிப்பதை அறிந்து மலைத்தேன் , அவள் கவிகளின் வரிகளின் இனிமையில் ஈர்க்கப்பட்டு பதில் கவிதை பதித்தேன் .ஒரு மாயம் மட்டும்
புரியவில்லை ? அவள் பதிவுகளையும் பிற பதிவுகளையும் அச்சு பிசகாமல் அப்படியே அழகாய்
அப்பழுக்கில்லாமல் எடுத்துகொள்பவர்கள், அதற்கு பதிலாய் நான் பதிக்கும் பதில்களை மட்டும் அழுக்காய் அகோரமாய் எடுத்துகொள்வது ஏன் ? கவிதையை வெறும் கவிதை கண்ணோட்டத்தில்
காணாமல் காதல் சாயம் பூசியதேன் ? ஏதும் ஊர்ஜிதமாய் தெரியாமல் எங்களை இணைத்து எதேதோ
பேசியது ஏன் ? என் தமிழ் ஆர்வத்திற்கும் கற்பனை வளத்திற்கும் ,கவி படைக்கும் திறனை
மேம்படுத்திக்கொள்ள தோதான இடம் என்ற எண்ணத்தில் தான் கவிபல படைத்தேன். மற்றபடி
யார் மீதும் எப்போதும் தீரா காதலோ இல்லை . இதை என் சுயநினைவோடு தடுமாற்றம் இன்றி
தெளிவாய் சொல்லிகொள்கிறேன் . இனி நீங்கள் காட்டும் மாற்றம் பொறுத்தே நான் தொடர்வதும்,
கவிதை பதிவுகள் தொடர்வதும் .
என்றும் அன்புடன்
ஆசை அஜித்