Author Topic: ~~ ஒத்திகை ~~  (Read 1213 times)

!! AnbaY !!

  • Guest
~~ ஒத்திகை ~~
« on: July 26, 2011, 07:12:18 PM »
உன்னோடு பேச
வார்த்தைகளைத் தேடித் தேடி....,
கண்ணாடி முன் ஒத்திகை பார்த்தேன்....!


என் வீட்டுக் கண்ணாடி
போதும் போதும் என்று
வாய் விட்டுக் கதறிடும் முன்...,
ஒரு வழியாய்....,
ஆனாலும்
அரைமனதாய்.....,
ஒத்திகை முடித்தேன்.....!


நடக்கையிலும்....
படுக்கையிலும்....,
மீண்டும் மீண்டும்
மனதுக்குள்
வார்த்தைகளைப்
படர விட்டு.....,
அதுவும் போதாதென.....,
கனவிலும் தொடர்ந்தேன்....!


இதோ....இப்போது.....,
நீ என் எதிரில்.....,
எனக்கு அருகில் இருக்கிறாய்.....!


ஆனால்.......
வா......ர்.....த்.......தை.....க......ள்.........,
சேர்த்து வைத்திருந்த
சுவடே இல்லாமல் வெறுமையாய்......!!


தேடித் தேடி
நானும் சோர்ந்தேன்...,
காணவே இல்லை.....!!


செய்வது புரியாமல்....,
சொல்லவும் தெரியாமல்..........,
உன் கண்களைப் பார்த்தேன்....!!


அய்யய்யோ.....,
இது என்ன அதிசயம்.......!?!
எனக்கு இன்பமான அதிர்ச்சியும்தான்....,
இது எப்படி சாத்தியம்....?


உன் கண்கள்
நான் உன்னோடு
ஒத்திகையில் பேசிப்
பார்த்ததை அப்படியே
வார்த்தை மாறாமல் சொல்கிறது.....?


சந்தேகமாய்
என்னையே கிள்ளியும் பார்த்தேன்.....
கனவு இல்லை.....உண்மைதான்.
சந்தோசத்தில் அணுவெல்லாம் ஆகாயமாய் விரிகிறது....!


உன் இமைகள் கொண்டே
என் இதயம் தோண்ட....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது......?


உன் ஒவ்வொரு
அசைவுகளிலும்
உயிரையே உறிஞ்சும் வித்தையை...,
எங்கேதான் கற்றாயோ.....?


ஒத்திகை பார்த்து வரும்
ஒவ்வொரு முறையும்....
உன் எதிரில் ஊமையாகிறேன்....!


ஆனால் நீயோ....
நம் கண்கள் சந்திக்கும்...
ஒரு நொடிப் பொழுதில்
ஒருமணிநேர உரையாடலின்
விரிவுரையை.....
பார்வையிலேயே பேசி விடுகிறாய்....!
« Last Edit: July 26, 2011, 07:21:55 PM by !! AnbaY !! »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ~~ ஒத்திகை ~~
« Reply #1 on: July 27, 2011, 06:28:24 PM »
உன் இமைகள் கொண்டே
என் இதயம் தோண்ட....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது......?


உன் ஒவ்வொரு
அசைவுகளிலும்
உயிரையே உறிஞ்சும் வித்தையை...,
எங்கேதான் கற்றாயோ.....?

nice lines ;) ;) ;)