(தொடர்ச்சி........)
சில நிமிடம் அங்கே அமைதி நிலவியது. இருவருக்கும் எதை பேசுவது என்று தெரியாமல் நின்றோம்.1
“எப்போது திரும்பவும் இங்கே வந்திங்க மோகன்”
“திருமணமாகிவிட்டதா மோகன் ...எங்கே உங்கள் மனைவி
என் அடுக்கடுக்கான கேள்விகள் மௌனத்தை கலைத்தன.
அவன் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிந்தன. இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்.
மோகன் அவன் தாயை இழந்ததையும் பின்னர் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறினான். வாழ்க்கை எப்படி யெல்லாம் திருப்பி போடுகிறது நினைக்கவே பிரமிப்பாக இருந்தது எனக்கு
“எனக்கு திருமணத்தில் இருந்த நம்பிக்கையே போய்விட்டது நிம்மி. என் தேவதை என் உள்ளத்தில் என்றும் வாழ்த்துக்கொண்டிக்கிறாள். அவள் இடத்தில வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை”’.
என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தோடின.
விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்தார்கள்.
“அம்மா இந்த அங்கிள் யாரு மா” என்று என் மகன் விஜி வினவினான்
நான் தடுமாறுவதை கண்ட மோகன் அம்மாவின் நண்பன் என்று பதில் சொன்னான், மோகன் குழந்தைகளுக்கு ஐஸ் கிறீம் வாங்கி கொடுத்தான். அவர்கள் வாங்கலாமா என்று என்னை பார்க்க வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். பின்னர் வாங்கிகொண்டார்கள். என் மகள் ஜனனி மோகனை எற இறங்க பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். . ,மோகனுக்கு புரிந்தது ஜனனிக்கு அவனது நீண்ட தாடி மீசை பிடிக்கவில்லை என்று.
" நான் இன்றைக்கே ட்ரிம் செய்துவிடுகிறேன் ஓகே வா" என்று அவள் கன்னத்தை தட்டியபடி சொன்னான் ஜனனி சிரித்துக்கொண்டே ஓகே என்றாள் . நான் சொல்ல நினைத்ததை ஜனனி செய்துவிட்டாள் என்று எனக்கு உள்ளுக்குள் சந்தோசம்தான்.
.
மோகன் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு போகலாம் என்றேன் பிள்ளைகளிடம். அவர்களும் சரியென்று "அங்கிள் பை " சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்
அடிக்கடி மோகனுடன் பேசுவது இப்பொது பழக்கமாகிவிட்டது. தொலைத்த ஒரு பொருளை அடைந்த சந்தோசத்தை என்னால் உணர முடிந்தது.
என் பிரச்னைகளை அவனுடன் பகிரும் போது மிகவும் ஆறுதலாகவே இருந்தது. அவனும் என்னைப்போலவே உணர்ந்திருக்கலாம் பிரிவுகள் பல நேரங்களில் நம்மை மிகவும் நெருக்கமாக்குகின்றன.
என் மகனுக்கு ஆறாவது பிறந்ததினம். அவனே போனில் மோகனுக்கு இன்விடேஷன் அனுப்பி இருக்கிறான். மோகனும் வந்தான். விளையாட்டு பொருள்கள் சாக்லேட் வேறு வேறு இனிப்புகள் என்று வாங்கி குவித்திருந்தான் . குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்கள். மோகனிடம் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டனர். மோகனும் அடிக்கடி வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தான். இப்பொது அடுத்த சோதனை ஆரம்பிக்கலாயிற்று. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் .மோகனையும் என்னையும் தப்பாக பேச ஆரம்பித்தார்கள். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
ஒரு பெண் கணவனை இழந்தோ பிரிந்தோ இருந்தால் அதற்கு பல பெயர்கள் சூட் டும் சமுதாயம் அவளைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை. மாறாக அவளை மாசு படுத்தவே முனைகிறார்கள்
ஒற்றை தாயாக வாழும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி யார் கவலை கொள்ளப்போகிறார்கள்? மாறாக வசை சொல்ல ஆயிரம்பேர் காத்திருப்பார்கள். பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிபந்தனைகள் ?
அவனிடம் இதை எப்படி நேரில் சொல்வது என்று தெரியாமல் பலமுறை யோசித்தேன் . அன்று இரவு போனில் பேசும்போது நாசூக்காக சொன்னேன். நிட்சயம் அவன் புரிந்துகொள்வான் என்று எதிர்பார்த்தேன்.
"நிம்மி என்னை வரவேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறாயா" என்று பளீர் என்று கேட்டான் மோகன், எனக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
"நான் மட்டுமில்லை உனது வேறு நண்பர்கள் யார் வந்தாலும் இதையேதான் பேசபோகிறார்கள். நமது சமுதாயம் மேலை நாட்டு உணவுகள் கலாச்சாரங்கள் என்பவற்றை பின்பற்றினாலும் இன்னும் அடுத்தவன் வீட்டு படுக்கையறையை எட்டிப்பார்ப்பதை மறக்கவில்லை... நமக்காக கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை நாம்தான் வாழவேண்டும்" என்றான்.
“அப்படியானால் இந்த கஷ்டம் என் வாழ்நாள் முழுவதும் தொடருமா :?” என்றேன் நான் புரியாமல்
“நிம்மி ஒவொரு கேள்விகளுக்கும் இரண்டு விடைகள் உண்டு. ஓன்று ஆம் மற்றது இல்லை. இதில் எதை எடுக்கவேண்டும் என்பது அவரவர் முடிவு.”
மேலும் என்னை குழப் பினான் மோகன். எனக்கு உலகமே சுற்றியது.
இரவு வணக்கம் சொல்லிவிட்டு போநை வைத்துவிட்டேன். அன்று இரவு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. பதிலும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் அப்டியே கழிந்தன.
,மூன்றாம் நாள் மோகன் போனில் கூப்பிட்டான்.
" என்ன முடிவு செய்தாய்"
" என்னால் எதுவுமே யோசிக்க முடியவில்லை"
" நிம்மி நீ ஏன் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது "திடீரென்ற மோகன் கேட்டதும் நான் ஆடிப்போனேன்
" இல்லை எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முக்கியம்
" நடக்கிற விஷயத்தை பேசுங்கள்” என்றேன்
.
பேச்சளவில் தான் நமது சமுதாயம் விதவைகளுக்கு மறுவாழ்வு அவசியம் என்கிறார்கள். ஆனால் நடைமுறை என்று வரும்போது பின்வாங்குகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு எந்தவித விதிவிலக்கும் இல்லை. மனைவி இறந்துவிட்டால் சீக்கிரமே திருமணம் செய்யும் ஆண்களைதான் பார்த்திருக்கிறோம். பிள்ளைகளை பார்த்துக்கொள்ள யாருமில்லை என்ற ஒரு சாக்கு போக்கு வைத்திருப்பார்கள். என்ன உலகமடா இது.
(தொடரும்......_),