என் காதல்
மூன்று காலத்திலும் நம்ம வாழ்க்கை
பயணத்தில்
இடம் பிடிக்கும் காதலே! பசி தூக்கம் இன்பம் துன்பம் என்று
தொலைத்து நிற்க்கும் போதும் காதல் தான் சிறந்த மருந்து!!
பள்ளி பருவத்தில் , பார்த்தும் பதியும்
முகம் அனைத்தும் நமக்கு காதலே!
ஏன் என்னிடம் வருகிறாய் காதலே!
உன்னை பற்றுவதற்கு எனக்கு வயதியில்லை காதலே!!
உன் அழகிலும் வசியத்திலும் மயங்குகிறேன் காதலே!
உன் வெப்பத்தை தாங்க மனமில்லை காதலே!!
கல்லூரி பருவத்தில் , வயதுக்கு வந்த காதலே!!
ஏக்கமும் , தாக்கமும், மனதை தொலைந்து போக வைக்கும் காதலே!!
நானத்துடன் உன்னை நெருங்கும் போது என் வயதை மறக்கும் காதலே!!
பெற்றோர், படிப்பு, வேலை மூன்றையும் நினைவுக்கு கொண்டு வரமால்
இருக்கும் காதலே!!
வேலை பருவத்தில், பக்குவபடும் வயதில் வரும் காதலே!!
ஒருத்தி ஒருவனை நினைப்பில வைத்து ஏங்கும் காதலே!!
எல்லை மீறலாம் , வாழ்க்கை நம்ம கையில் என்று தைரியம்
கொடுக்கும் காதலே!!
ஊடல் கூடல் மயக்கம் கோபம் தாகம் , நீ இல்லாத இடம் ஒன்று உண்டோ
காதலே!
காதலுக்கு மரியதை , கல்யாணத்தில் சந்தோஷம் என்று
பேர் போகும் காதலே!!
என்றும் எப்போதும் எங்கேயும் ஒன்றாக நம்ம மனதில் இருந்து
ஆனந்தம் அழுகை அரவணைப்பு தந்து ஒன்றுடன் வாழ்வின்
முடிவு வரை துணையோடு துணையாக கைகோர்த்து முதிர்ந்த
நடை போட்டு வியப்புடன் நிமிர்ந்து பார்த்து , நம்ம வாழ்க்கையில்
ஓர் துணை (இவன்) காதலே !! காதல்!!!
என்றும் இனியா😍