இயல்பாய் பழகி
ஈர்த்து செல்லும் !!
மேகமாய் வந்து
மழையாய் பொழியும் !!
இன்னிசையாய் மாறி
கானங்கள் தரும் !!
துவண்டால் கூட
தூக்கி நிறுத்தும் !!
ஒன்றாய் கூடும் போது
வளமென செழிக்கும் !!
வழிப்போக்கனாய் வந்து
நட்பில் ஒருங்கிணையும் !!
இல்லத்தின் வாசலில்
மலர்கள் மலர்வது போல,
நட்பின் வாசலில்
மனங்கள் மலரும் !!
நல்ல நண்பனை தேடு...
வாழ்வு வண்ணமயமாகும் !!!...