Author Topic: பயங்கரங்களின் முகவரி!!!  (Read 851 times)

Offline Yousuf

பயங்கரங்களின் முகவரி!!!
« on: August 02, 2011, 06:41:38 AM »
மொழிக்காக சிந்தப்பட்ட
குருதிப் பெருக்கால்
நனைந்து நனைந்து
எம்மொழி
செம்மொழியானது !

ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான தமிழ்த்தாயின்
காயங்கள் ஆறாது!
புகழ்மாலை சூட்டுவதால்
போர்க்குற்றம் மறையாது!

பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
தமிழ்ச்சாதி
இனி ஒருபோதும் உறங்காது!

ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
இராஜபக்சப் படுகொலைகள்!

செம்மொழிச் செம்மலே!
சொந்தக் காலில் நிற்க முடியாத
காலத்திலும்
தன் வாரிசுகளின் பதவிக்கு
பந்தக்கால் நடுவதில் நாட்டம் கொள்ளும்
அதிகார வெறியுனக்கு!

தமிழர்களின் நிர்வாணத்தால்
தயாரிக்கப்பட்டது
உன் பதவிப் பொன்னாடை!

நான் என்று சொன்னால்
ஒட்டாதது
உதடுகள் மட்டுமல்ல!
துரோகிகளின் பட்டியலில்
வரலாற்றுப் பிழையான
உன்பெயரும் தான் !

வீழ்வது
நாமாக இருந்தோம்!
வாழ்வது
தமிழின் பெயரால்
பிழைப்பு நடத்தும்
ஈனர்களின் கூட்டம்!

ம‌லிந்த‌ அர‌சியல் ந‌ட‌த்தும்
உன் த‌வ‌றுக‌ளைக்
மன்னிக்கக் கூடும்..!

மன்னிக்க முடியாது..!
பிணங்களின் மீதேறி
நீ நடத்தும்
முடிவற்ற பெருநாடகம்!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பயங்கரங்களின் முகவரி!!!
« Reply #1 on: August 02, 2011, 10:35:33 PM »
பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
தமிழ்ச்சாதி
இனி ஒருபோதும் உறங்காது


niyam theivamum kulanhaium gunathal onrunuvaangaa... aanaa antha kulanthaikalukku alivai konanthatharkku intha kadavul innum theerppu valankavilayee :( :(
                    

Offline Yousuf

Re: பயங்கரங்களின் முகவரி!!!
« Reply #2 on: August 02, 2011, 10:52:54 PM »
மனிதர்கள் செய்யும் தவறுக்கு இறைவன் உடனுக்குடன் தண்டனை கொடுக்க நாடினால் இந்த பூமியில் ஒரு மனிதன் கூட உயிரோடு இருக்க முடியாது...!!!  ( அல்-குர்'ஆண்).

அவர்களுக்குரிய அவகாசம் வரும் பொது அவர்களை இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் காப்பாற்ற முடியாது...!!!