Author Topic: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்  (Read 46505 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
மாங்கனி கண்ணதாசனின் க(ன்)னி காவியம், சில சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த காவியம் பெரும்பேர் பெற்றது..

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்ற பொழுதில் சிறையில் அவரால் படைக்கப்பட்ட காவியமே இது, இதன் இன்னொரு சுவாரஸ்யம் இந்தக் காவியத்தை எழுத கண்ணதாசன் எடுத்துக்கொண்டது வெறும் ஆறு நாட்கள், அதுவும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமே அவர் எழுத அமருவாராம்..

இந்த காவியம் நாற்பது பாடல் கொண்டது, நாற்பது பாட்டிலும் நாற்பது சம்பவங்கள் நிறைந்திருக்கும்.. எழுதி இரண்டு வருடம் கழித்தே இந்தக் காவியம் புத்தகமானது..

மாங்கனியை நான் என் நடையில் என் வார்த்தைகளில் எழுத வெகு நாளாய் ஆசையுற்றிருந்தேன்.. கண்ணதாசனே இதைக் காவியமாக தான் எழுதி இருக்கிறார், மீண்டும் இதை தொடர்கவிதையாக எழுத என்னக் காரணம் ?

காரணம் இதுதான், நான் தமிழ் படிக்க ஆரம்பித்த காலம் முதல் காவியங்களில் கதைகளில் வெகு சில பாத்திரப் படைப்புகளை ரசித்திருக்கிறேன் கண்ணகி மாதவி மணிமேகலை பதுமை தமயந்தி என்பன சில அதில்..

கண்ணகி - மாதவி என்று வரும் போது எனக்கு இருவரையும் சமமாய் பிடிக்கும்..

அன்னைக் கண்ணகி எந்த அளவுக்கு கற்பில் சிறந்தவளோ அந்த அளவுக்கு மாதவியும் கற்புடையவளே..

அன்னைக் கண்ணகி பிறப்பால் நற்குலத்தாள், கன்னியியம் கற்பியம் என்று கட்டுப்பாடுகள் பல்துக்குள் வளர்ந்தவள்.. அதனால் அவள் வாழ்வின் நன்நெறிப்படி கணவன் இல்லாத தருணத்திலும் வாழ்ந்தாள்..

மாதவி அப்படி இல்லை கணிகையர் குலத்தில் பிறந்தவள், அவள் வாழ்வுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை, யாருடனும் எப்போதும் அவள் வாழ அவள் சமுதாயத்தில் இடமுண்டு வசதி உண்டு, இப்படி கட்டுப்பாடு இன்றி வாழ்கிறாள் என்று அவளை உலகம் இடித்தோ இழித்தோ பேசப்போவதில்லை இருந்தும் அவள் கற்புடையவளாய், கொண்ட கோவலனுக்கு மட்டும் மனைவியாய் வாழ்ந்தாளே அந்த கற்பு எனக்கு அவள்மீது அதிகமாய் மரியாதையைக் கூட்டியது..

இதைப் போல சில பாத்திரப் படைப்புகளை காதலித்திருக்கிறேன், அப்படி நான் காதலித்த முதல் பெண் மாங்கனி, இந்த பாத்திரப் படைப்பு கண்ணதாசனின் கற்பனைப் படைப்புதான் சரித்திரத்தில் இந்த பெயரோ ஆளோக் கிடையாது.. மாங்கனியின் காதல் தோற்ற போது அவளைவிட நான் அதிகமாய் அழுதேன்.. அதற்கு பிறகு நான் காதலித்த மற்றொரு பெண் கல்கி அருளிய சிவகாமி சபதத்தின் சிவமாகி.. என்னை அழவைத்த அடுத்த ஒரு நாயகி சிவகாமி இவளையும் நான் அதிகமாய் காதலித்தேன் இந்த கதையைப் படிக்கிறப் போது நரசிம்ம பல்லவனாய் நடமாடியவன் நாந்தான்..

மாங்கனிப் பற்றி சொல்லும் போது கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்லியது இதுதான், இந்த காவியத்தைப் படைக்கும் போது என் உணர்ச்சி ஓட்டத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை.. அதனால் வார்த்தைகள் இலக்கணத்தின் வரையரைக்குள் வந்தமரவில்லை.. செந்நாப்புலவர்களே மன்னித்துவிடுங்கள் என்றுச் சொன்னார்..

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்

என்று பாடிய என் காதல் கவிஞனாலேயே உணர்ச்சி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நானோ சிறுவன் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து மாங்கனியைக் காதலித்ததில் தவறென்ன வியப்பென்ன இருக்கிறது..

அதனாலேயே இந்த காவியத்தை என் மொழிகளில் எழுத ஆசைப்பட்டேன், கண்ணதாசன் அளவுக்கு சுவையாய் தரமுடியாது என்றாலும் என் முழு திறனையும் முயற்சியையும் கொட்டி எழுத முயற்சிப்பேன்..

வழக்கம் போல் அன்பு உறவுகளின் ஊக்கமும் உற்சாக பின்னூட்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..
« Last Edit: April 09, 2013, 02:18:47 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வள்ளுவனோ கம்பனோ இளங்கோவோ சங்க இலக்கியமோ
வாழ்த்தி இறைவனைப் பாடாமல் வளரவில்லை
தெள்ளு தமிழ்தேவி அவளை வாழ்த்தி
சின்னவனென் படைப்பை துவங்குகிறேன்..

தமிழ் வணக்கம்

பெற்றது தாயெனினும்
உற்றது நீயே தமிழே
கற்றதை அறிந்ததை
கையிருப்பில் உள்ளதை
வைத்தே அன்னை உன்னை
வாழ்த்த வடிக்கிறேன் கவி..
பிள்ளைத் தமிழ்
பெரியவர் தமிழாக ஆசிகொடு
செந்நாப் புலவர்
வாய் தவழ்ந்த செந்தமிழே!
எந்நாவிலும் வந்து நடமாடு..
« Last Edit: September 07, 2012, 02:29:12 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
பழையனின் அரசவை


"புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி"





என்றொலித்ததும்
எழுந்தனர் அவையோர் யாவரும்..

வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..

வெளிச்ச மேகமாய்
வெண்ணிற உடை
முகத்தில் வசீகரம்
முல்லை மாலை
அகத்தின் தெய்வீகம்
அங்கமெலாம் விரிந்து
தகதகக்கும் தாரகையாய்
தரைமீது மிளிர்ந்தாள்..

மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

ராணியாக வேண்டியவள்
ஞானியாக நோம்பு கொண்டாள்

நாணமும் முகம்வர
நாணும் வீரமகள்
தானமும் தவமும்
தரித்த ஈரமகள்..
போனது துறவானாலும்
போகவில்லை நாட்டைவிட்டு

வேலேந்திய விழியாள்
வேந்தன் மகள்தான்..
பெண்ணரசிப் பெயர் "பொன்னரசி"

அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..

நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்
அருகே வந்ததும்
அமைச்சன் "அறிவன்"
முன்னே வந்து
முகற்கண் வணங்கினான்..



தொடரும்...
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒரு சிறு விளக்கம் வேண்டுகின்றேன் ... இந்த காவியத்தை கண்ணதாசன் எழுதியது கவிதை வடிவிலா இல்லை .. கட்டுரை கதை வடிவிலா... அதை நீங்கள் கவிதை வடிவில் கொடுக்கின்றீர்களா ....? இந்த கவிதை உங்களால் காவியத்தில் இருந்து எழுதபட்டதா ?
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அவரும் கவிதை நடையில் தான் எழுதினார், அந்த கதையை உள்வாங்கி நான் என் நடையில் எழுதுகிறேன்

அதவாது கண்ணதாசன் முடித்த இடத்தில் இருந்து நான் துவங்கி இருக்கிறேன்

பொன்னரசி துறவு பூண்டதோடு காவியம் முடியும், அவள் அரச கட்டில் ஏறுவதாக நான் கதை அமைத்து எழுத முயல்கிறேன்

கண்ணதாசன் மரபு பாக்களில் எழுதினார் நான் புதுக்கவிதை, மரபு மற்றும் நவீன இலக்கியம் கொண்டு எழுத திட்டமிட்டு இருக்கிறேன்

கதை மட்டுமே கண்ணதாசனுடையது கவிதை என்னுடையதுங்க‌
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நன்று நன்று ...


Quote
வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்

அருமையான உவமான உவமேயம் .... பெண்களை வர்ணிப்பதில்  ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபணபடுத்தி இருக்கீங்க ..

Quote
மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

என்ன அருமையான ஒரு கரு வெளிப்பாடு ... நன்று  நன்று

Quote
அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..


மோப்பம் குலையும் அனிச்சம்  ... அதாவது சிறு தூண்டளுக்கே சிலிர்த்து ஒடுங்க கூடிய பெண்மை ... என்ன அருமையான கவி ஆளுகை ...

பனிக்க தலை சாய்த்தனர் ... கண்கள் பணிக்க ... இந்த அன்பும் அழகும் கொண்ட நன்  மகள் துறவறம் பூண்டதால் .. கண்கள் பனிக்க  தலை வணங்கினார் .. ஆஹா அருமை ...

Quote
நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்

அடுக்கு மொழியில் .. அழகாய் வர்ணனை ... மிகவும் அருமை ஆதி ...  தொடரட்டும் உங்கள் காவிய கவிப்பயணம் ...
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நன்றிங்க, ஒட்டித்தந்தமைக்கு இன்னொரு நன்றி

இது போன்ற படைப்புகளில்  தீராமல் பெய்கிற சிறபுஞ்சி மழை மாதிரி அடுக்காடுக்காய் இரவு மேகங்கள் நகர்கிற பெங்களூர் வானம் மாதிரி வடியாமல் விரிகிற சென்னை வெயில் மாதிரி வர்ணனைகள் கொட்டிக்கிட்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் உவப்பாக இருக்காது

இன்னொரு விடையம் சரித்திர கதை என்பதால் காட்சிகளை கண்முன் நிறுத்த பல விவரணைகள் தேவைப்படும்

தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கங்களுக்கு மிக்க நன்றிங்க‌
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அமர்க கட்டில்



புத்த மயிலைப்
புகழ்ந்து வரவேற்றான்

மோட்சம் குடிஇருக்கும்
மோகூரின் தேவியே
ஆட்சி ஏற்று
ஆளவந்த காவிநிலவே
வருக! வருக!

பழையன் பெற்ற
இளைய மகளே
விளையும் விடியலின்
விரியும் ஒளியே
வருக! வருக!~

கொற்றவன் பெற்றவன்
குலம் காக்க
உற்ற தவத்தோடு
வந்த உத்தமியே
வருக! வருக!

என்றே அண்ணவன்
பொன்னரசியை வணங்கி வாழ்த்தினான்..

பின்னே இவ்வாறு
பேசத் துவங்கினான்..

ஊழி செய்த
ஊறின் காரணத்தால்
வேலிப் போன்ற
வேந்தனை இழந்தோம்
ஆழிப் பெருங்கடலில்
அடையும் காவிரியில்
தாலிக் கட்டிய
தலைவனுடன் தென்னரசியை
இழந்தோம் நாங்கள்
அன்னை இல்லா பிள்ளையானோம்
அம்மா!

காரிட்ட நீரில் தழைத்த
காட்டுக் கொடியாய்
வேர்விட்டு வளர்ந்து
விருப்பிய வண்ணம் படர்ந்து
சீர்கெட்டு நம்குலம்
சிதைந்து போகக் கூடாது
என்றேப் பதைப்பதைத்து
எங்களை வழிநடத்த வந்த
மங்கள மணிநிலவே
சிங்க கட்டில் கொள்க என்றான்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்
                    

Offline Anu



மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்
naanum idhai vazhi mozhigiren aathi..


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வாசிப்பவர்களுக்கு புரிய வேண்டும் எனும் அதீத கவனத்தாலும் எளிமை தன்னால் சேர்ந்திருக்கலாம்

நன்றி குளோபல் ஏஞ்சல், நன்றி அனு
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
பொன்னரசி சிங்க கட்டில் கொளல்..


வஞ்சமும் பழியும்
வறுமையும் சூதும்
கொஞ்சமும் இல்லா குடிமக்களே!

வெஞ்சின நெஞ்ச வீரர்களே !

தஞ்சமென்றே வந்தவரை
தானையென்று காக்கும் தர்மர்களே!

எஞ்சியது எறும்பளவு ஆனாலும்
எல்லோருக்கும் ஈயும் கொடைஞர்களே..

விஞ்சி விசும்பையும் தமிழால்
வெல்லும் பாவலரே நாவலரே!

பொன்னாடாய் விரிந்த
பொழிவு கொண்ட
நன்னாடாய் இருந்த
நம்நாட்டு மீது
யார் கண் பட்டதோ ?
சின்னாப் பின்னமானது
சிதைக்குழி பல கண்டது!


அப்பா பழையன்
அக்காள் தென்னரசி
அத்தான் அடலேறு
ஆடும்பூ மாங்கனியென
யாவரையும் இழந்தோம் – அறக்
காவலரையும் இழந்தோம்!

நாடாள அழைத்த
நல்ல உள்ளங்களே
பேடாளும் ஆட்சி
பேராட்சி யாக
ஊடூழி வென்று
உயராட்சி யாக
நீடூடி வாழ
நிறையாசீர் தருவீர்!

என்று வேண்டினாள்
அன்பின் இனத்தாள்

சாமரம் வீசுயும்
பணியாள் முதல்
சாமறம் போற்றும்
வீரர் வரை யாவரும்
பூவரும் புத்தமகளை
நாநறும் வார்த்தையால் வாழ்த்த‌
கோவுரு பூண்டாள்
கோயில் குணத்தாள்

சிங்க கட்டிலேறி
தங்கத் தட்டிலிட்ட‌
பொங்கும் நிலவை போல‌
நங்கை அமர்ந்தாள்

முரசும் முழங்கிற்றவள்
அரசு ஏற்றதை
சிரசு தாழ்த்தினர்
பரவச மோகூரார்

அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
நாநறும் வார்த்தையால் வாழ்த்த‌
கோவுரு பூண்டாள்
கோயில் குணத்தாள்




அருமை ... ஒரு வார்த்தையால் அவள் குண நலன்களை சொல்லி முடித்து விட்டீர்கள் ... தொடருங்கள்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நன்றிங்க‌, தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கத்திற்கு
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
மோகூரின் வளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‎

குறுவட்ட நிலவாக சிறுவண்ண மலராக
குவிந்த மோகூர்
தெருமுட்டும் தென்னைமரம் நறுகொட்டும் சோலைவனம்
செரிந்த வாகூர்
பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்

வறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை

தண்டையணி மங்கையர்கள் தண்ணழகை கண்டுமனம்
தாவி ஓடும்
கொண்டையிடை பூக்களது கொங்கைவிட கூர்மையென
சண்டைப் போடும்
நீண்டமதில் கோட்டையதில் நீந்தமுகில் கொத்தளமோ
வானம் மோதும்
மூண்டுஎழில் ஆண்டுவரும் மோகநகர் முன்னிலையில்
சொர்க்கம் தோற்கும்

அந்தநகர் ஒருபுறத்தில் ஆம்பற்பூ பூத்திருக்கும்
அழகு ஏரி
வந்தமரும் நாரைகளோ வாய்வழிய உண்டுசெலும்
மீன்கள் வாரி
மந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி

விடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!


அன்புடன் ஆதி