தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 337

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Hazel:
தொலைவினும் தொலைவிலே ஓர் இருதய ராகம்,
என்னை அழைக்கத் துணிந்தவரும் தான் யாரோ!

மெல்லிய துடிப்பின் ஸ்வரம்,
வல்லிய என் மனதை பிளப்பதும் தான் ஏனோ!

மனிதனுக்கு என்னவாயினும் செவிமடுக்கேன் என இருமாந்திருந்த என் நெஞ்சம்,
இப்பொழுது கனத்து போவதும் தான் ஏனோ!

தேவனின் அழைப்பை மட்டுமே ஏற்ற என் மனம்,
இன்று மனித அழைப்பையும் ஏற்க நினைப்பதும்தான் ஏனோ!

மனம் போன போக்கிலே,
என் இறக்கைகள் கூட செல்ல துடிப்பதும் தான் ஏனோ!

கோடான கோடி தேசங்கள் கடந்திருக்கும்  என்னை, உனக்கு நினைக்க தோன்றியதும் தான் ஏனோ!

உன் முகமறியேன் உன் குரலறியேன்
உன் குணமறியேன்,
ஆயினும் உன் உள்ளமறிந்ததாலோ என்னவோ..
உன்னை நினைத்து, நானே இறகாகிப் போனதாலோ என்னவோ..
நீ இருக்கும் திசை நோக்கி என்னையறியாமல் பறக்கிறேன், மிதக்கிறேன்..!

இதோ! உன் இருப்பிடமும் அடைந்து விட்டேன்! இவ்வளவு அருகில் இருந்தும் உன் பாராமுகம் தான் ஏனோ!

அடடே,
இதென்ன ஒளி! அது உன் முகமல்லவா! இந்நொடியை என்னை தோற்றுவித்த தேவனே வந்து கேட்டாலும் கொடேன்!!!! உன்னையும் தான்!

ஒரு தேவதைக்கும் நேசிக்கும் நெஞ்சமுண்டென்று உணரவைத்த நீ, என்றும் பூரணமாய் என்னோடு!!






Vethanisha:
என் தேவனே

அன்று
உனக்குள் தொலைந்தது ஒரு பொற்காலம்
இன்று 
அறிந்தே உன்னை தொலைத்தது  என் நிகழ்காலம்

அங்கு 
நிஜ உலகில் சேர முடியா உனை நான்
இங்கு
கனவுலகில் தேடி வருகிறேன் தேவதையாய்

அங்கு
உறவுகள் உண்டு நமை பிரிக்க
இங்கு
 உறவாய் நீ மட்டும் என் அருகில் இருக்க

அங்கு
 மதம் என்னும் வேற்றுமை நமை தடுக்க
இங்கு
மனதோடு மனம் மட்டும் ஒன்று சேர

அங்கு
கண் காண தூர தேசத்தில் நீ வசிக்க
இங்கு
கை தொடும் தூரத்தில் உன் ஸ்பரிசம் எனை  வருட

அங்கு
கன்னம் வெறும் கண்ணீரையும்
இதயம் வெறும் கவலையையும் சுமந்து நிற்க
இங்கு
உன்  கன்னக்குழி  சிரிப்பில்  என்
மொத்தமும் நாணம் கொள்ள

அங்கு
கூண்டு கிளியாய் சிறைப்பட்டு நான்   தனிமையில்  வாட
இங்கு
சுதந்திரமாய்  இறக்கைகள் சூடிக்கொண்டேன் 
உனை நோக்கி  பறந்தோட

அங்கு
நிறைவேறா ஆசையாய் கானல் நீராய்  நீ இருக்க
இங்கு
நிறைவாய் உன்னுள் என்றென்றும் நான்  இலயிக்க   

பரவசம் அடைகிறேன் நான் 
கனவை கலைக்க மறுக்கிறேன் நான்

கண்களை திறந்தால்
விலகி  விடுவாய் என்றால்
இதோ
என் இமை இனி திறக்காது

தேவனே

என் கரம் பற்றி கொள்
கனவு வாசலில் காத்திருக்கும்
உன் தேவதையை கண்டு கொள்

எங்கே  சென்றாலும் இனி   
எனை!  அழைத்து செல்
அணைத்து செல் 

என்   உறவாய் நீ
உன்   உணர்வாய் நான்

VethaNisha.M

VenMaThI:


பெண்ணே

கண்ணால் கண்டேன் உன்னை
காதல் கொண்டேன் உன்மேல்
பித்தாய் அலைகிறேன் உன்னால்
அதை உன்னிடம் கூற மட்டும் ஏனோ தயங்குகிறேன்....

என் மனதின் போராட்டம் என்று முடியுமோ
என் மனைவியாக உன்னை மணக்கும் பொழுதா -- இல்லை
மாற்றான் மனைவியாக உன்னை பார்க்கும்போழுதா ?
கடவுளே .. என் காதலை முதலில் அவளிடம் சொல்ல கருணை புரிவாயா?

மயங்கிக்கிடந்த பொழுதினிலே
மனக்கதவும் திறந்தது
ஆங்கே ஒரு மங்கையும் தெரிந்தாள்
காதல் தேவதையோ இவள் ?

அழைத்ததும் வந்த தேவதையே
என் ஆழ் மனதின் காதலை
என்னவளிடம் கூற வழி வகுப்பாயா என்று கேட்டேன் ...
வாயை மூடி ... நான் சொல்வதை கேள் என்று தொடர்ந்தாள் ...


காதலை சொல்ல கருணை கேட்டு
கருத்தில் என்னை நினைத்தவனே
காதலை சொல்லும் முன் .. உனக்கு சில
குறிப்புகள் சொல்கிறேன் கேள் .

ஜாதி மதம் பார்க்காமல்
மங்கையின் நிரமதுவும் பாராமல்
அப்பன் பூட்டன் சொத்தெதுவும் கேளாமல்
பொன் நகை வேண்டாம் உன் புன்னகை போதும் என்றும் .....

பிறந்த வீட்டின் ராணியாம் உன்னை
புகுந்த வீட்டின் மஹாராணியாய் அமர்த்தி...
கணவன் என்ற பெயர் கொண்டு ஊரார் அழைக்க
நின் தந்தையின் மறு உருவாய் இருப்பேன் என்றும் ....

உன் வீடு என் வீடு என்ற பாரபட்சம் பாராமல்
நீயா நானா என்ற போர் என்றும் வாராமல்
நாம் என்று வாழ்வோம் எப்போதும் -- என்று கூற
உன் மனதை பக்குவப்படுத்தி ... பின் உன் காதலை சொல்வாய் என்றாள் ....

என்னவளின் அன்பை மட்டுமே எதிர்பார்த்து
"என்றென்றும் உனக்காய் மட்டுமே நான்
நீ என்றும் நான் என்றும் அல்ல
நாம் என்று வாழ்வோம் வா " -- என்று கூறி ...

என்னை ஏற்று எனக்காய் வரும் என்னவளை
என்றுமே கலங்காமல் காப்பேன் ....
நான் அவளுடன் இருக்கும் வரை அல்ல
என் உடல் கல்லறை சேர்ந்த பிறகும் என்ற சபதத்துடன் .....


இதோ கிளம்பிவிட்டேன்..
என்னவளிடம் என் காதலைக்கூற ....❤️❤️❤️❤️

Sun FloweR:
உயிரோடு இருந்தாலும்
மண்ணோடு மறைந்தாலும் பூமியில் மிச்சம் ஒன்று இருக்குமானால் அதன் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும்..

எவர் தடுத்தும் கேளாமல் சுயம்புவாய் செழித்து வளரும் தன்மை ஒன்று இருக்குமானால் அதன் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும்..

காதலில் உழன்று பிரிவென்ற விஷம் அருந்தி, வாழ்வைத் தொலைத்து, உயிரையும் தொலைத்து பரிதவிக்கும் காதல் தேவதைகள் நாங்கள்..

ஜீவனிருக்கையில் சிலாகித்துக் கூடிய பொழுதுகள், ஜீவனற்றுப் போகையில் இல்லாமல் போய்விடுமா ?
நாங்கள் சுவாசித்த காற்றும்,
எங்கள் மேல் பட்ட மழைத்துளிகளும்,
நாங்கள் நுகர்ந்த பூவின் நறுமணமும் இன்னும் பூமிதனில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது..

முதலில் நீ முந்துகிறாயா? அல்லது நான் முந்துகிறேனா என்ற எங்களின் வீழ்தல் போட்டியில் வெற்றியின் பங்கு சரி சமமே எம் இருவருக்கும்..

காதலில் முயங்கி, காதலில் மிதந்து , வாழ்தலை ருசிக்க அவா கொண்டு,ஏக்கமுற்று பெருமூச்சிட்ட காலங்கள் கரைந்து போய் இன்று கைத்தலம் பற்றுகின்றோம் என் உயிரை நான் இழந்தும், அவள் உயிரை அவள் இழந்தும்..

காதலர் வாழ்வில் பிரிவென்ற வார்த்தை காணாமல் போகவும், மனிதர்கள் மனதில் காதலைப் பிரித்தல் என்ற எண்ணம் வீழ்ந்து போகவும் நவீன காதல் தேவதைகள் நாங்கள் இருவரும் கைகோர்த்து பாடுபடுவோம்..

காதல் உலகில் புதுவரவாய்
மலர்ந்த காதல் தேவதைகள் என்று உலகம் இனி எங்கள் இருவர் பெருமை பேசட்டும்..
மரணித்தாலும் மரணமில்லாத காதலர்கள் என்று உலகம் இனி எங்கள் இருவர் அருமை பேசட்டும்..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version