தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்

(1/468) > >>

ஸ்ருதி:
இது ஒரு கவிதை விளையாட்டு..

ஒருவர் ஒரு கவிதை  எழுதிவிட்டு

"அடுத்த தலைப்பு" என்று  ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

அடுத்து வருபவர்

அந்த தலைப்புக்கு  ஒரு  கவிதை எழுத வேண்டும்.. அவர் ஒரு "தலைப்பை" தர 

வேண்டும்  இல்லை எனில்

உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ... அல்லது வரியையோ தலைப்பாக

கொடுக்கலாம்.......கடைசி வரி தான் போட வேண்டும்  என்று  இல்லை...

கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..  கவிதையில் இல்லாத   வேற

சொல்..தரலாம்... சொந்தமாக கவிதை எழுத இதை ஒரு வாய்ப்பாக

பயன்படுத்திகொள்வோமே...

முயன்றால் நீங்களும் கவிஞர்/கவிதாயினி  தான்.... ;)  ;)

இது தான் விளையாட்டு....

நான் தொடங்கி வைக்கிறேன்

உன் உறக்கத்தின் கனவாக வந்து
உன்னை ரசித்துவிட்டு போய்விடுகிறேன்
எனக்காக ஒரு இடம் இதயத்தில் இல்லா விடினும்
உன் கனவினில் வந்து போகும் வரமாவது தந்துவிடு


அடுத்த தலைப்பு

வரம்

தமிழில் உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள்..முடிந்த வரை  :) :) :)

Global Angel:
வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான்  தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..

வாழ்க்கை

Yousuf:
நிலை இல்லாத மனித வாழ்க்கையில்...

பொருளையும், பேராசையையும், சுயநலத்தையும்

விரும்பும் சுயநலமிக்க மனிதர்கள்....

இந்த மனிதர்களுக்கு பிறரின் வாழ்க்கையை பற்றி கவலை இல்லை...

இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சுய நலம் தான்...

இவர்கள் வாழ்க்கை முடியும் வரை...

இவர்களின் சுயநலமும் பேராசையும் நிரந்தரமா?

இனியவதும் பிறரின் வாழ்கையை பற்றி சிந்திக்கட்டும் இவர்கள்...!

கடமை

ஸ்ருதி:
அருமை....வாழ்த்துக்கள் யுசுப்...மற்றும் ஏஞ்சல் .

 ;) ;) ;)

Global Angel:
வீட்டுகாவலாளிக்கோ விடியும் வரை கடமை
தோட்ட தொளிலாலிக்கோ இருளும் வரை கடமை
காவல் தொளிலாலிக்கோ குறிப்பிட்ட நேரம் வரை கடமை
அவரவர் கடமைக்கு நேரம் குறித்த கடவுள்
காலையில் கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு உறங்காது போன உன் இரவுகளை-----

அம்மா உன் கடமைக்கு பாசத்திற்கு வரையறை குறிக்கவில்லையே .. :-*

கோலம்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version