FTC க்கு எனது நன்றிகள்.. இந்த வார நிழல் படத்துக்கு... நெடுநாளாக இப்படி ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற அவா.. இன்று நிறைவேறியது..
மதிப்பற்று போன உயிர்களை கொண்ட வினோத உலகம்
சலனமற்ற இரவில் திடிக்கிடும் சப்தம் வெறியர்களின் பெரு மூச்சலைகளாய் அணு குண்டுகள்... அணு அணுவாக வதைத்திட..
இம் மண்ணில் பிறந்த ஒரே ஒரு தவரிற்காய் பதை பதைத்திடும் பிஞ்சு உள்ளங்கள்..
கண்முன்னே என்ன நடக்கிறது என்று கூட அறிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத மழலைகள்..
'நெருப்பு சுடும் ' என்று அறிந்திராத, பொத்தி வைத்து காத்த பிஞ்சுகள் கொழுந்து விட்டு எரியும் அனல் பிழம்பில் கருகி சாம்பலை கூட அடையாளம் காண முடியாத அவலம்..
மழலை மொழி பேசி கொஞ்சல் மொழிகளும் கூச்சல்களும் பெரின்பமாய் கொண்டாடும் வயதில் கூக்குரலும் கதரலும் கேட்க்கும் நிர்ப்பந்தம்...
தன்னோடு பேசி கொண்டிருந்த , விளையாடி கொண்டிருந்த உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறிய சதையும் சிந்திய ரத்தமுமாக கண் முன்னே பார்க்க வேண்டிய கட்டாயம்...
தாயை, பிள்ளையை, கணவனை, மனைவியை, தந்தையை, ஏன் ஒன்றாக வாழ்ந்த ஒரு குடும்பமே இருந்த தடயம் கூட இல்லாமல் தரை மட்டமாக்கிய ஈவிறக்கம் இல்லாத மனித மிருகங்கள்..
என்னதான் வேண்டும் இந்த பினம் திண்ணிகளுக்கு.... ??
என்னதான் சேர்த்து வைத்தாலும் நாம் சேர போவது என்னவோ ஆறடி பூமி தான்.. அதற்குள் எவ்வளவு போராட்டம்..
அடுத்த கணம் தன் உயிர் பிரியக் கூடும் என்று கூட அறிந்திராத பேதையர்கள், உயிரற்ற பூமிக்காய் உயிருள்ள ஜீவன்களை துச்சம் என எண்ணுவது ஏனோ...??
நிச்சயமாக இவர்கள் இன்னல் படும் தருணம் தொலைவில் இல்லை, இன்று இழக்கும் ஒவ்வொரு உயிரிட்கும் மண்ணிலோ விண்ணிலோ பதில் கூறும் தருணம் வந்தே தீரும்...
இந்த உலகில் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் போதும்.. இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு..
ஒவ்வொரு நாளும் அடுத்த நொடி என்ன ஆகுமோ...?? யாரை இழக்க போகிறோமோ..?? என்று வாழும் நரகம் வேண்டாம்... விண்ணுலக சொர்க்க தோட்டத்தில நிம்மதியாக இருங்கள்... நிம்மதியுடன் இருங்கள்... நீதி காணும் நேரம் நிச்சயம் வந்தே தீரும்..