FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on January 05, 2019, 10:22:47 AM
-
காதல்!!
பருகி தீராத பெருநதி,
பகிர்ந்து குறையாத ஞானம்,
காட்டி முடியாத பேரன்பு,
மனமார்ந்த பிரார்த்தனை,
எளிய ஓர் இறைவணக்கம்,
கொடுத்து செழிக்கும் பெருஞ்செல்வம்,
தோற்றுக் கொடுத்தலின் பெரும் வெற்றி.
விட்டுக் கொடுத்தல்களில்
ஆனந்தம் கொள்ளும் வரை
காதல் தீர்வதில்லை.
எதிர்பார்ப்பு சுமைகளால்
அன்பின் முதுகெலும்பு
முறிக்கப்படாதவரை காதல் அலுப்பதில்லை..