Author Topic: குருதிப்பூக்கள்  (Read 389 times)

Offline Guest

குருதிப்பூக்கள்
« on: September 25, 2018, 03:47:16 PM »
எப்போதும்
என் அருகாமையில்
அமர்ந்திருக்கிறது வலிகள்
என் தோள் புஜங்களை
தொட்டு திரும்பச்செய்கிறது
அவ்வப்போது...
.
அனலாய் கொதிக்கும்
மணற்பரப்பில் அனாயாசமாய்
அமைதியாய் கடந்து செல்லும்
ஒட்டகங்கள் தன் பாதங்களின் சூட்டை
உணர்ந்ததாய் சொன்னதேயில்லை...
.
என் வெந்து நீறிய நெஞ்சின்
உணர்ச்சிகள் இன்னும்
அந்த ஒட்டகத்திமில்களைப்பற்றி
ஆகாயத்தை வெறித்துக்கொண்டே
அமைதியாய் பயணிக்கிறது...
.
பாலைநிலப்புற்களின் முட்கள்
ஒட்டகங்களின் நாக்கை
குத்திக்கிழித்துவிடுவதில்லை
அடங்காத ஆசைகளில்லாத இதயம்
அதிர்ச்சிகளுக்கு அடிபணிவதில்லை..
.
என் பாதங்களின் வலிமையை
சில வலிகளால்
சோதித்துப்பாற்கிறது இதயம்
என் விழிகளை கூரிய பார்வைகளால்
வீழ்த்தப்பாற்கின்றன பூனைகள்
என் கைகளில் இன்னும்
ஏதோ மீதமிருக்கிறது....
.
சதைத்துண்டுகளுக்கு நடுவே
துடிக்கத்துடிக்க கதறுகிறது
அச்சிறிய இதயம் - குருதிப்பூக்களால்
இன்னும் மந்திரம் சொல்கிறது
பொறுத்திரு..பொறுத்திடு..
உன் நிறுத்தம் வரவில்லை....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ