சத்தியத்தின் முக்கியத்தை முக்கியமாய்
நித்தியமாய், நித்தம் கொண்டு
ஒட்டுமொத்த சித்தத்தையும் சுத்தபடுத்தி
சுத்தமாய் வைத்து கொண்டு
சத்தியமாய் சொல்வதிது ,சொல்லுவதை
சொல்லுகிறேன், மெல்லமாக கேளடி நீ
எனை நித்தம் நித்தம் போற்றி ,பாராட்டி
பித்தம் கொள்ள வைத்தவள் நீ
ஒத்துகொல்வாயோ ஒத்துகொள்ளமாட்டாயோ என
உத்தேசமாய் கூட தெரியவில்லை நீ
ஒரு நாள் உன் பெயர் பொருத்தம் பொருத்தி
விருத்தம் ஒன்றை பதித்தேன்
அப்பொழுதும், உன் (பெயர்) திருத்தம் சொல்லவில்லை நீ
சொல்லாமல் தொட்டுசெல்வது தென்றலாம் ,சரி
சொல்லாமலே விட்டு செல்பவளா நீ ??
தினம் தினமும் பல பதிப்பு தினுசு தினுசாய் நீ பதிப்பாய்
இருந்தும் ஒரு தினுசு பதிப்பில் மட்டும் இனம் புரியா
ஈர்ப்பு ,என்றதை நினைவில் வைத்துள்ளாயா நீ ?
தமிழ் பற்று, தன்னடக்கம்,சகஜமாய் பழகுதல்,
விட்டு கொடுத்தல் ,சமயத்தில் துப்பி தீர்த்தல்
இப்படி நற்குணங்கள் பல இருந்தும்
உனக்குள்ளேயே ஒளிந்திருந்த ஒப்பில்லா ஓவியம் நீ
வெளிநாட்டில் வசித்தாலும் ,வேற்று மொழி வாசித்தாலும்
தமிழுக்கும்,தமிழருக்கும் தகும் உயர்வளிக்கும்
தன்னிகர் இல்லா சொத்தாமே நீ ??
முழுமதியாய் முகம் இருந்தும் ,முக்காடிட்டு
முகம் மறைத்து, பெண்மையின் மென்மையையும்
மேன்மையையும் போற்றும் முகமதிய (இசுலாமிய) முத்தாமே நீ???
உன் கொஞ்சும் குரலுக்கு இணை நிற்க தன்னால்
தனியாக முடியாமல் துணையாய் கிளியையும், குயிலையும்
அழைத்ததாம் மைனா
எப்படித்தான் உன்னை பெற்று ,அழகு பெயரும் இட்டு
பெருமை சூட்டினாரோ உங்க நைனா
இது போதும், இது போதும் இதுக்குமேலயும் ஏதும் சொன்ன
குழப்பங்கள் தன் வரும் வீனா சரியா ......... ?