உன்னை பற்றியே முப்பொழுதும்
சிந்திக்கிறேன்
என் சித்தம் எல்லாம் நீ
உன் சித்தம் எல்லாம் உறவுகள்
சந்தோசம் மட்டுமே சொந்தமாக இருந்த
நமக்கு
கண்ணீரும் சொந்தம் ஆனது
நான் பேசும் வார்த்தைகளை ரசித்தவன்
இப்போதோ என் மௌனத்தையே அதிகமாக
ரசிக்கிறான் ...
நானோ குழப்பத்தில் ஆழ்ந்தேன்
ஆராய்ந்தேன்
விடை காண
சட்டேன்று என் தோழி
கூறியது பொறி தட்டினர் போல்
ஞாபகம் வந்தது
அளவுக்கு மீறி அன்பு காட்டினால்
திகட்டி விடுமாம்
எனக்கு மட்டும் இது வரை
அமிர்தமாக தானே இருக்கிறது
உனக்கு மட்டும் ஏனோ இப்படி ?
அளவோடு அன்பு காட்ட கற்று
தர வில்லையே என் பெற்றோர்
இந்த விஷயத்தில் நான் பெண் பாரியாக
இருந்தது குற்றமா ?
கருமியாக இருந்திருக்க வேண்டுமோ ?
மண்ணோடு புதைந்தாலும்
கருமியாக இருக்க இயலாதே என்னால் .....