Author Topic: கேரளத்து மீன் குழம்பு  (Read 587 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கேரளத்து மீன் குழம்பு
« on: April 29, 2012, 07:57:26 PM »
தேவையான பொருட்கள்


   
  • மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ
  • எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்
  • வெந்தயம் - கால் ஸ்பூன்
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 100 கிராம்
  • மிளகாய் -2
  • பூண்டு - 4 பல்.
  • இஞ்சி - சிறிய துண்டு
  • தக்காளி - 1
  • கொடம் புளி- ஒரு சிரிய துண்டு
  • மீன் மசாலா ( ஈஸ்டன்)- 3 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் - 1 கப்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்.
   

         
   செய்முறை


   
  • முதலில்

மீனைச்சுத்தம் செய்து ( சிறிய மீனாக இருக்கும் ,அதனை வாலில் இருந்து தலை
நோக்கி செதிலை சுறண்டி எடுத்தால் வந்து விடும்,தலையையும் வயிற்றோடு
சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு
கழுவிக்கொள்ளவும்.
  • புளிக்கரைக்க வேண்டாம் ,அப்படியே துண்டாக போடலாம்.
  • வெங்காயம்

,தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.மிளகாய் கீறிக்கொள்ளவும்,பூண்டை
தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.தேங்காய்ப்பாலுடன்
அரிசிமாவை கலந்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணை

விட்டு,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,
கருவேப்பிலை தாளிக்கவும்,வதங்கியவுடன்,தககாளி,உப்பு போட்டு
மூடவும்.தக்காளி மசிந்தவுடன் மீன்மசாலா பொடியை போட்டு தண்ணிர் சேர்த்து
கொடம் புளியை போடவும்.
  • மசாலா வாடை ,புளி வாடை அடங்கியவுடன் ,மீனை

போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும்.5 நிமிடம் கழித்து
தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை
அணைத்து் விடவும்.விரும்பினால் மல்லி இலை தூவி பறிமாரலாம்.
  • கேரளத்து மீன் குழம்பு ரெடி.
   


         
   குறிப்பு:

 தேங்காய்
எண்ணை வாசம் பிடிப்பவர்கள் உபயோகிக்கலாம். இது மலயாளி ரெஸ்டாரண்ட் உள்ள
குழம்பு போலவே இருக்கும். இந்த மீனை முழுதாக முதல் மறியாதை செவாலியே
சிவாஜி ஸ்டைலில் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.

         
   [/color]


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்