FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on August 05, 2015, 11:37:18 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: MysteRy on August 05, 2015, 11:37:18 PM
நிழல் படம் எண் : 076
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Dong லீஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/076.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: thamilan on August 08, 2015, 08:00:45 PM
அன்பே
உலகம் தொட்டிராத வார்த்தையொன்று
தொண்டைக்குழி உடைத்து
உனக்காய் கவிதை புனையத் தவிக்கிறது

இதயம் உடைக்கும் பார்வையேந்தி
ஈரம் சுரக்காத உன் காதல் மனதில்
நீ காதலிக்கிறாயென
உன் இமைகள் சிமிட்டி
உன் இதயம் சொன்னபோது
எப்படி ஒப்புமென் சிறு இதயம்
கனவோ என கடற்கரை அலையில்
கால் பதித்தேன்
அலைகள் அறைந்து சொன்னது
நிஜம் தானென

காதலுக்கும் கடற்கரைக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு
பலரது காதலுக்கு 
முகவுரை எழுதியதும் இந்தக் கடற்கரை தான்
அந்தக் காதலில் பலவற்றுக்கு
முடிவுரையும் எழுதியதும் இந்தக் கடற்கரை தான்
இதே கடற்கரையை
சாட்சியாக வைத்துக் கேட்கிறேன்
இதோ என் இதயம்
என்கைகளில் மலர்களாக
என் இதயத்தை காணிக்கையாக தந்து கேட்கிறேன்
ஏற்றுக் கொள்வாயா என்னை
என்னை உன் இதயத்தில் சூடிக்கொள்வாயா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: Dong லீ on August 13, 2015, 11:55:52 PM
திருக்குறள்    
திருக்குறளால்   உன்
சிறு குரலுக்கு
மாலை சூடுவேன் !

சீவக சிந்தாமணி
சீவக சிந்தா மணியை கோர்த்து உன்
சிவந்த கழுத்துக்கு
அணி செய்வேன் !
குண்டலகேசி
குண்டலகேசியை உன்
குண்டு காதுகளுக்கு
 குண்டலமாக்குவேன்!
ஆத்திசூடி
ஆத்திசூடியை உன்
நெத்தி சூடியாகச் செய்வேன் !
வளையாபதி
வளையாபதியை உன்
 கை வளையாக்குவேன்!
குறுந்தொகை
குறுந்தொகையை உன்
குறுகிய இடையணி எனச்  செய்வேன் !
மணிமேகலை
மணிமேகலையை உன்
கொலுசின் மனியாக்குவேன் !

ஏற்றுக்கொள் கண்ணே
என் கண்ணான தமிழ் போல்
உனையும் உயிருள்ளவரை
போற்றுவேன் !!

என் பரணி எங்கும் 
உலா வரும் உன்
பிள்ளைதமிழ் பேச்சுக்கு
இந்த வெண்பாவை
பரிசளிக்கிறேன் !!

உலகத்தில் என் தமிழைப்போல் 
சிறந்த பரிசு ஏதுமில்லை
அதை உனக்கு தந்து நான்
சொல்ல முனைவதெல்லாம் இதுவே ..
நான் உன்னை காதலிக்கிறேன் !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: SweeTie on August 14, 2015, 12:29:02 AM
வட்ட நிலாவை வானுக்கு பிடிக்கும்
பொங்கும் அலைகளை கடலுக்கு பிடிக்கும்
பஞ்சு மிட்டாய் குழந்தைக்கு பிடிக்கும்
அந்த ஆறடி அழகனை .......
பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பேசும் பொழுதுகள் நீளாதா என ஏங்கி
தூங்காத இரவுகள் எத்தனை.....
விழிகள் நேருக்கு நேர் சந்தித்த வேளையில்
மயங்கிய சுகமான இதமான நினைவுகள் எத்தனை
பிடிக்கும்  உன்னைப் பிடிக்கும்

 நான் காண்பது கனவா நினைவா?
இன்று எனக்காக  எங்கும் அவன் இதயம்
நீண்ட மௌனத்தின் பிரதிபலிப்பா?
ஒற்றை ரோஜாவால் இதயத்தை நிறைத்துவிட்டான்
பிடிக்கும் எப்போதும் உனைப் பிடிக்கும்

என் மனதில் பதிந்த அவனது நினைவுகள்
நிழலாய்த் தொடர்ந்தன என் கண் முன்னே
என் இதயத்தின் துடிப்பு இரு மடங்காகி
ரக்கை கட்டி பறந்ததுபோல்  பிரமை
பிடிக்கும் உன்னை எப்போதும் பிடிக்கும்.

எனது பெண்மை விழித்துகொண்டது
கையில் ஏந்துகிறேன்  அவன் இதயத்தை
ஒற்றை சிவப்பு ரோஜா காதலுக்கு அடையாளம்
காத்திருந்த என் காலம் வீணாகவில்லை
பிடிக்கும் உன்னை மட்டுமே பிடிக்கும்

அவன் சுவாசம் உணர்ந்தேன் அந்த ரோஜாவில்
பேச்சுக்கு இனி இடமேது
இரு ஜோடி விழிகள் இன்பத்தில்
நான்கு சொட்டு கண்ணீரை சிந்தியதே
பிடிக்கும் உன்னை என்றென்றும் பிடிக்கும்.


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: ராம் on August 15, 2015, 12:02:49 AM
முகம் காணா மலரே என் ஆருயிரே
உன்னை காண துடிக்கும் என் கண்களுக்கு
எப்போது உன்னை
காணும் வரம் கொடுப்பாய்…..
என் வாழ்க்கை என்னும் கோட்டையில்
இது என்னமாயமோ….!!!
பசி என்பதே ருசி அல்லவா 
அது என்று தீருமோ
அந்த வானும் தீர்ந்து போகலாம்
நமது வாழ்கை தீருமா!!!!
பருவங்களும் மாறலாம் நிறம் 
அனால் நம் பாசங்கள் மாறுமோ…!!!
ஒரு காட்டிலே 
நான் போகிறேன்
என்னுடைய திசையே
நீதானடி பெண்ணே…
என்னை தலைகீழாய்
செய்த அழகிய பூவே
எந்தன் எதிர்காலம்
உன் நிழலோரம் 
அன்பே நீ வா வரம் தா...
எந்தன் கரை உடைகின்றதே
மலைபோல உன் நியாபகங்கள்!!! 
என்னுடைய மனம் உரைகின்றதே
குளிராய் உந்தன் மோகனம் ….
என்னவாகுமோ
ஏதாகுமோ
எந்தன் வாழ்க்கை
புதிதாகுதே உன்னால்
எந்தன் இமை மேல்
வரைவேன் உன்னை
அதை நான் தவறாமல்
தொட்டு ரசிப்பேனே……
நீ யாரென்ற விடை
காண்பேன் பெண்ணே
நான் யாரென்ற விடை
காண்பாயா என் கண்ணே..!!!!
அடி நெஞ்சில் வரும் நினைவுகள் 
சுகமான வழியை தரும் 
சுகமான காதலும் இதுதானோ!!!!
நீயே என் சுவாசம்
உன்னில் நான்  பாதியானால்
என் வாழ்க்கை சுவர்க்கமாகும்
என் காதலை ஏற்று கொள்வாயா கண்ணே!!!!………
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: SuBa on August 17, 2015, 07:11:21 PM
தூக்கமில்லாமல் என் இரவுகள்
ஓய்வில்லாமல் என் பகல்கள்
நேரம் எதுவாக இருப்பினும்
ஒவ்வொரு நொடி நேரமும்
நீ இருக்கிறாய் என் மனதில்

ஒரு நாளின் 24 மணி நேரமும்
ஒரு வாரத்தின் 7 நாட்களும்
நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
என விரும்புகிறேன்
உன்னுடன் இருக்கும் நேரங்கள்
சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்கிறேன்

உன் கை கோர்த்து
மழையில் நடனம் புரிய
எந்நாளும் விரும்புகிறேன்
அந்நாளும் விரைவில் வரும்
என நம்புகிறேன்

உன்னை எண்ணும்
பொழுதெல்லாம் மெய் சிலிர்த்தேன்
இத்தனை எளிதாய்
என் இதயம் களவு போகும்
என்றறியாமல் இருந்திருந்தேன்

முன்னறியா உணர்வுகளும்
அனுபவங்களும் என்னுள்ளே..
இன்று நான் ஒத்து கொள்கிறேன்
நான் உன்னிடம் காதலில்
விழுந்து உருகி கொண்டிருக்கிறேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: NiThiLa on August 18, 2015, 05:38:25 PM
உணர்ந்தேன் என் உயிரில் ஒரு இனிமையை
வியந்தேன் எப்படி என் வானம் புதிதனாதென்று
தேடினேன் அந்த கள்வனின் காலடி சுவடுகளை

கண்டுகொண்டேன் என் கண்ணனை
கூறினான் நீ தான் நான் என்று
அமிழ்ந்தேன் அந்த நொடியின் இனிமையில்

தொலைந்தேன் அவன் உயிர் காதலில்
தேடுகிறேன் மீண்டும் அவன் வரவு எப்போதென்று
என்னவனே  மீண்டும் வருவாயா

 என்னை எனக்கே அறிமுகம் செய்தவனே
என் இமைகளையும் இனிமைகளையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு
காத்திருகிறேன் கண்கள் பூத்திருக்கிறேன்
உன் வரவுக்கு[/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: Software on August 18, 2015, 08:43:25 PM
அன்பே உன் நினைவு என் மனதில்
அலைகளை போல் ஓயாமல் 

அடித்துக்கொண்டே இருக்கிறது
ரோஜாவின் மலர்களை போல்

உன் மனமும் மலர்ந்து கொண்டே இருக்குறது

கல் எறிந்த குளத்தில் 
வளையங்கள்  விரிவது  போலே

குழி  விழுந்த  உன்  கன்னங்களில் ,
வைரங்கள்  மின்னுகிறதே !

என்னை  ஒரு  முறை  தொடுவாயா ???

உயிரே ...

பிறப்பு  ஒரு முறைதான் ...
நான்  பிறந்து  விட்டேன் ...
உலகில்  மனிதனாக ...

இந்த  வாழ்க்கை
வாழ்ந்து  விட  ஆசை
உன்னோடு  சேர்ந்து ...

நீ  சம்மதம்  தருவாயா ....

 என்  காதலை  ஏற்றுக்கொள்வாயா !!! ?

காதலித்து  கை  பிடிப்பாய்

என

காலமெல்லாம் காத்திருப்பேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 076
Post by: MysteRy on August 18, 2015, 11:18:41 PM
உண்மை காதல் ஒரு புனித தீபம்
உலகம் உள்ளவரை  அது சுடர்விடும்
என்றும் அணையாமல் .
உன்னதமான அதன் ஒளியை
மறைத்திட இயலாது எவராலும் .

உண்மை காதல்
இதமான  குரல்களில் பேசும்
உண்மை காதல்
மென்மையான காதுகளில் கேட்கும்

உண்மை காதல்
இதயங்களை வெல்லும்
உண்மை காதல்
அச்சங்களை கொல்லும்

உண்மை காதல்
எதிர்பார்ப்புகள் அற்றது
அது தான் இணைக்கும்
இதயங்களை மெல்லிய கைகளில்
ஏந்திக்கொள்ளும்