41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 341
« Last post by VenMaThI on April 30, 2024, 12:10:15 AM »அன்பால் சேர்ந்த கூட்டமோ
ஆடம்பரத்தால் வந்த கூட்டமோ
அக்கம் பக்கம் இருப்பார் யாரோ
நமக்கென்ன அவர் யார் எவரோ....
ஆட்டம் போடும் வயது இது
ஆடித்தான் களைப்போமே ...
ஆடும் தெம்பு கால்களுக்குண்டு
எதுவரை என்றுதான் பார்ப்போமே....
பாட்டு பாடும் நெஞ்சமது
பாடித்தான் மகிழ்ந்திடுமே..
சங்கீத மொழியில் தான்
வார்த்தைகள் கோர்வையாய் நடமாடுமே...
தெரிந்தவர்கள் நம் அருகினிலே
தெரியாதோரும் நம் மத்தியிலே
ஆடிப்பாடும் நேரமிது.. நம் வாழ்க்கையின்
வண்ணமிகு வானவில் கோலமிது...
இந்த கால்களும் ஒரு நாள் களைத்துப்போகும்
ஆடும் கால்களும் ஆட்டம் கண்டுவிடும்
மனது நினைக்கும் பாதையில்.. கால்கள்
செல்ல முடியாமல் துவண்டுவிடும்...
பாடும் நெஞ்சமும் ஒரு நாள்
பாடக் கெஞ்சும்.. ஆனால்
கொஞ்சல் மொழி பேசும் மழலையாய்
வார்த்தைக்கோர்வைகள் தொற்றுப்போகும்...
ஆடவும் பாடவும் முடியாமல் போகும் நேரம்
அன்று ஆடிய ஆட்டமும் அன்று பாடிய பாட்டும்
மனதில் என்றுமே குத்தாட்டம் போடும்
நினைவலைகள் மட்டுமே நெஞ்சில் நிலையாய் நிற்கும்...
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..என்பதை
வேதவாக்காய் நித்தமும் கொண்டு
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்க்கை... என்ற
படிப்பினையை மனதில் பதித்து....
இன்றைய நாளை இன்பமாய் செலவிடு
வரும் நாட்கள் அனைத்தும் வரவாய்... நம் வரமாய் அமையும் என நம்பிக்கை கொள்
பிறர் இன்பமுறச்செய்...நீயும் இன்புற்றிரு......
❤️❤️❤️❤️❤️