மலர்ந்தது ஒருநாள்...
ஒவ்வொரு நாளும் மலர்ந்ததுபோல்
எத்தனையோ புன்னகை நிறைந்த
மலர்களாய் மகிழும் உன் சிரிப்பு......
உன் அழகின் மென்மை விரல்கள் பற்ற
ஆடி தவழும் உன் கைகளை பற்ற
என்ன வரம் செய்தேனோ...
அழகாய் நடமாடும் தங்க சிலையே,
கடலில் கிடைத்த முத்தே,
மண்ணில் கிடைத்த வைரமே,
வானில் தோன்றிய வானவில்லே,
சில்லென்ற மழையே என் இல்லத்தின்
குட்டி தேவதை நீ....
உன்னை பார்க்கும் போதெல்லாம்....
உன் விரலிடுக்கில் ஒளிந்து கொள்ள
என் கரம் துடிக்குதடி சின்னப் பெண்ணே!
இயற்கையின் தழுவலில் ஒரு சுகம்
பூக்களின் அழகினில் தனிவிதம்
முயல் குரலின் இன்னிசை ஒரு விதம்
இயற்கையின் பரிசை உணர்ந்து
சிரித்திடு கண்ணே ....!!!