Author Topic: இனியவை நாற்பது  (Read 11659 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #30 on: September 12, 2011, 11:04:42 PM »
30

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினியது இல்.



(ப-ரை.) நன்றி பயன் - (ஒருவன் செய்த) நன்றியின் பயனை, தூக்கி - கருதி, வாழ்தல் - வாழ்வது, இனிது - மன்றம் கொடும்பாடு உரையாத - நியாய சபையின்கண் ஓரஞ்சொல்லாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; அன்று - (தன்கண் வைத்த) அந்நாள், அறிவார் யார் என்று -அறிவாரொருவரு மிலரென்று, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, வௌவாத -அபகரியாத, நன்றியின் - நன்மையினும், நன்கு இனியது - மிக வினியது, இல் - பிறிதொன்றில்லை.

"செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ "

(புறம் 34)

என்றிருத்தலின், ‘நன்றிப் பயன் றூக்கி வாழ்த னனியினிதே ' என்றார்.

‘மன்றம்' என்புழி அத்துச் சாரியையும் ஏழனுருபுந் தொக்கன.

"நன்றிப் பயன்தூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன்
மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானு மிம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்"

(திரிகடுகம் - 62)

எனவும்,

"வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை "

(நல்வழி - 23)

எனவும் பிறருங் கூறியவாற்றான், ‘மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே ' என்றார்.

சான்றியதென அடைக்கலப் பொருளை அபகரிப்பின் தெய்வங் கண்டு ஒறுத்தலின், ‘அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வௌவாத, நன்றியி னன்கினிய தில்' என்றார்.

தெய்வங் காணுமென்பதனை,

"வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு "

(நீதிநெறி விளக்கம் - 94)

என்பதனாலும்,

அடைக்கலப்பொருளை அபகரிப்பிற் பெருந்துன்பம் விளையுமென்பதனை,

"அடைக்கலம் வௌவுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்கா தார் சொல் "

(இன்னா - 41)

என்பதனானுந் தேர்க.

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #31 on: September 13, 2011, 12:33:18 AM »
31
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.


(ப-ரை.) அடைந்தார் - (தம்பால்) அடைக்கலம் புக்கார் , துயர் கூரா - துன்ப மிக்கடையாது, ஆற்றல் - செய்வது , இனிது-; கடன் கொண்டும் - கடன் வாங்கியும், செய்வன - செய்யத்தக்கவற்றை, செய்தல் - செய்வது, இனிது-; சிறந்து அமைந்த - மிக்குநிறைந்த, கேள்வியர் ஆயினும் - நூற்கேள்வியை யுடையவரானாலும் , ஆராய்ந்து அறிந்து - ஆராய்ந்தறிந்தே, உரைத்தல் - (ஒன்றைச்) சொல்லுதல், ஆற்ற இனிது - மிக வினிது.

‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் என்றார் பிறரும்.

சரணாகத ரக்ஷணஞ் செய்தல் பேரறமென்பார் 'அடைந்தார் துயர்கூரா வாற்ற வினிதே ' என்றார். காகாசுர சரணாகதி, சுக்ரீவ சரணாகதி, விபீஷண சரணாகதி முதலிய பல சரணாகதிகளைப் பற்றிக் கூறுதலின் ஒருசார் இராமாயண மென்னும் இதிகாச முற்றுஞ் சரணாகதி சாத்திர மென்பதூஉந் தெரிந்து கொள்க.

கூரா - கூராது என்னும் வினையெச்சங் கடைக்குறைந்து நின்றது. இனி, அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச மெனவும், எதிர்மறை வினையாலணைந்த பெயரெனவும் கொண்டு பொருளுரைப்பாரு முளர்.

செய்யத்தக்கவாவன வருணத்திற்கும் நிலைக்கும் இன்றியமை யாதவும் கடமையாயவும் பெரும்பயனுடையவும் பின் இன்பம் பயப்பவும் முதலாயின.

‘கடன் கொண்டும்' என்புழி உம்மை இழிவுசிறப்பு.
"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு"

(குறள் - 503)

என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை யுளதாகலின், ‘சிறந்தமைந்த கேள்விய ராயினுமாராய்ந் தறிந்துரைத்த லாற்ற விவினது' என்றார்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #32 on: September 13, 2011, 12:40:33 AM »
32
கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.



(ப-ரை.) கற்று அறிந்தார் - (நூல்களைக்) கற்று (அவற்றின் பொருளை) உணர்ந்தவர், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தினது பயன், இனிது-; பற்று அமையா (குடிகண்மாட்டு) அன்பு வையாத, வேந்தன், கீழ் - அரசன் கீழ், வாழாமை - வாழாதிருத்தல், முன் இனிது - மிக வினிது. தெற்றெனவு இன்றி - ஆராய்தலில்லாது, தெளிந்தாரை - (தன்கண்) வினையை வைத்தாற்கு, தீங்கு ஊக்கா - கெடுதி செய்யாத, பத்திமையின் - அன்புடைமையினும், பாங்கு இனியது - நன்றாக வினியது, இல் - இல்லை.

கூறுங்கால் இனிதன் றெனினும் , பயன் இனிதென்பார் ‘கருமப் பொருளினிதே' என்றார்.

அரசற்குக் குடிகண்மாட் டன்பில்லையாயின் குறை நீக்கலும் முறை செய்தலும் இலவாகலின், ‘பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிதே' என்றார்.

அரசன் ஒருவன் பிறப்புக் குணம் அறிவு என்பவற்றையும் செயலையும் காட்சி கருத்து, ஆகம் மென்னும் அளவைகளான் ஆராயாது அவன்கண் வினையை வைப்பின், அவன் அன்புடையனல் லாக்கால் கெடுதி செய்த லெளிதாகலின், ‘தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப், பத்திமையில் பாங்கினிய தில்' என்றார். ‘ஊக்காப் பத்திமை' என்புழிப் பெயரெச்சங் காரியத்தின்கண் வந்ததென்க.

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #33 on: September 13, 2011, 12:47:03 AM »
33
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.



(ப-ரை.) ஊர் முனியா - ஊரார் வெறுக்காதனவற்றை, செய்து ஒழுகும் - செய்து வருகின்ற, ஊக்கம் - பெருமை, மிக இனிது-; தானே - (தலைவனாகிய) தானே, மடிந்திரா - (ஒரோ வழித் தாமத குணத்தான் யாவர்க்கும் வருகின்ற சோம்பலின் கண்) வீழ்ந்திராது, தாள் ஆண்மை - முயற்சியை யாளுந்தன்மை, முன் இனிது - மிக வினிது; வாள் மயங்கும் - வாட்கள் (நெருக்கத்தான் ஒன்றோடொன்று) கலக்கின்ற ,மண்டு அமருள் - மிக்க போரில், மாறாத - மீளாத, மாமன்னர் - பெருமையுடைய அரசர்களது, தானை - சேனைகள் (பொருதலை) , தடுத்தல் -ஓரரசன் விலக்குதல், இனி்து-.

முனிதல் - வெறுத்தல், ஊர் முனிதல் - ஒரு படித்தாய் எல்லோரும் வெறுத்தல்.

"கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னாற்கிடந் தூர்முனி பண்டமே”

(தேவாரம்)

என்றவிடத்தும் ‘ஊர் முனி பண்டம் ' என்றிருத்தல் கண்டு கொள்க.

‘தானே' என்புழி ஏகாரம் சிறப்பு.

எத் துணையூக்க முடையார்க்குந் தாமதகுணத்தான் மடிவருதலியல்பெனினும் அஃது அங்ஙனம் வந்துழி அதன்கண் வீழாது, முயற்சியின் தலைநிற்றல் நன்றென்பார், ‘தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே' என்றார்.

 
 
« Last Edit: September 13, 2011, 12:49:38 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #34 on: September 13, 2011, 12:54:07 AM »
34

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது.



(ப-ரை.) எல்லி பொழுது - இரவின்கண் ; வழங்காமை - வழி நடவாமை, முன் இனிது - மிக வினிது ; சொல்லுங்கால் (பலவற்றைச் சொல்லுமிடத்து, சோர்வு இன்றி - (ஒன்றிலும்) மறதியின்றி, சொல்லுதல் -சொல்வதன், மாண்பு - மாட்சிமை, இனிது-: புல்லி கொளினும் - (வலியத் தாமாகவே வந்து) பொருந்தி நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கப்படாத கயவருடைய, கேண்மை - நட்பினை கொள்ளா விடுதல் - கொள்ளாது நீக்குதல், இனிது-.

விடப்பூச்சிகள் முதலிய சரித்தலானும், பனி முதலியன நோய் செய்தலானும் ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே' என்றார்.

சோர்வு - குற்றமாயின், சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன வென்க.

பொருளல்லார் - அறிவிலாதார் இழிகுலத்தார் என்பர் பரிமேலழகர்
.
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #35 on: September 13, 2011, 12:57:27 AM »
   
 35


ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
1வெற்வேறில் வேந்தர்க்கு இனிது.



(ப-ரை.) வெற்றி வேல் - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய, வேந்தற்கு - அரசனுக்கு, ஒற்றினால் - ஒற்றராலே, ஒற்றி (எல்லார் கண்ணும் நிகழ்வனவற்றை) ஒற்றுவித்து, பொருள் தெரிதல் - (அவற்றின்) பயனை ஆராய்தலின், மாண்பு - பெருமை, இனிது -; முன்தான்தெரிந்து - தான் குற்றத்தை) முன்னர் ஆராய்ந்து, முறை செய்தல் - தண்டஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது பற்று இலனாய் - (ஒருவர்க்குப்) பற்றிலனாய், பல் உயிர்க்கும் - எல்லார்க்கும், பாத்து - (அப் பற்றினைப் பகுத்து, பாங்கு உற்று அறிதல் - எல்லாரிடத்தும் (தானும்) சென்று குற்றமுளவாயின்) அறிதல், இனிது -.

"ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்"

(குறள் - 538)

என்றிருத்தலின், ‘ஒற்றினா னொற்றிப் பொருள் தெரிதன் மாண்பினிதே ‘என்றார். ஒன்றி : பிறவினைப் பொருளில் வந்த தன் வினை, ‘முன்தான் தெரிந்து முறை செய்தன் முன்னினிதே ' என்றது, தன் கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக் குற்றத்தைத் தான் முன்னர் ஆராயாத அரசற்கு அக் குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலாரோடும் ஆராய்ந்து அதனளவிற்றாகச் செய்தல் கூடாமையி னென்க.

"ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்துங் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று"

(நீதிநெறி - 32)

என்றிருத்தலின், ‘உற்றுப் பாங்கறிதல்' என்றா ரென்க. ‘வெற்றிவேல்' என்பது கருத்துடையடை: இம்மூன்றையுஞ் செய்யானாயின் இவற்குவேல் போரின்கண் வெற்றியைத்தாராதென்பது கருத்தாகலின்.

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #36 on: September 13, 2011, 01:00:44 AM »
   
 36

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.



(ப-ரை.) அவ்வித்து - மனக்கோட்டஞ் செய்து, அழுக்காறு உரையாமை - பொறாமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது - மிக வினிது செவ்வியனாய் - மனக்கோட்ட மிலனாய், சினம் செற்று கடிந்து - கோபத்தைப் பகைத்து நீக்கி, வாழ்வு - வாழ்வது இனிது - ; கவ்விக்கொண்டு - மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது - தாங்கள் கண்ட பொருளை , காமுற்று (பெற) - விரும்பி, வவ்வார் - (சமயங்கண்டு) அபகரியரதவராய், விடுதல் - (அதனை மறந்து) விடுதல், இனிது -.

"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும் "

(குறள் - 168)

ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்;


"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்"

(குறள் - 39)

ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும்,

"நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்"

(குறள் - 171)

ஆகலின், ‘கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று, வவ்வார் விடுத லினிது ' எனவுங் கூறினார். கவ்வித்தாங் கொண்டு என்புழி ‘கொண்டு எச்சதிரிபென்க.

தாம் : அசை
 

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #37 on: September 13, 2011, 01:03:20 AM »
37

இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.



(ப-ரை.) இளமையை - தனக்குள்ள இளமைப் பருவத்தை, மூப்பு என்று - முதுமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல் இனிது-; கிளைஞர்மாட்டு - சுற்றத்தாரிடத்தே, அச்சு இன்மை - அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களை, கேட்டல் கேட்பது, இனிது-; தட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பணை - மூங்கிலை யொத்த, தோள் -தோள்களையும், தளிரியலாரை - தளிரை யொத்த மென்மையையுமுடைய பிற மகளிரை, விடம் என்று - நஞ்சென்று , உணர்தல் - நினைத்தல் இனிது-.

"மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்கா யுதிர்தலும் உண்டு "

(நாலடி - 19)

ஆகலின், ‘இளமையை மூப்பென் றுணர்த லினிதே ' என்றார்.

"அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று "

(குறள் - 532)

ஆகலின் , சுற்றத்தைக் கண்டுழி அதன் நன்மை உசாவுதல் நன்றென்பார் ‘கிஞைர்மாட் டச்சின்மை கேட்ட வினிதே ' என்றார். இதற்குப் பிற பொருள் கூறுவாருமுளர். ‘ அச்சின்மையை' ‘க்ஷேமசமாச்சார ' மெனவும் ‘அச்சின்மை கேட்டலைக் ‘குகலப் ரச்ந' மெனவுங் கூறுப வடமொழி வாணர்.

‘தளிரியலாரை, விடமென் றுணர்த வினிது ' என்றமைக் கேற்பப் பிறரும்.

"அஞ்சனவை வேற்க ணரிவையர்தம் பேராசை
நெஞ்சு புகினொருவர் நீங்கு நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை யெய்ந்நாளு மீர்ந்திடுமால்
நஞ்சமினி தம்மவோர் நாளு நலியாதே "

(கந்தபுராணம் , மார்க்கண் - 24)

"உண்ணாதே யுயிருண்ணா தொருநஞ்சு
சனகியெனும் பெருநஞ் சுன்னைக்
கண்ணாலே நோக்கவே பருகியதே
யுயிர்நீயுங் களப்பட் டாயே "

(கம்ப. இராவணன் - 221)

எனக் கூறியிருந்த லுணர்க
 

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #38 on: September 13, 2011, 01:05:15 AM »
38
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங்
கற்றா உடையான் விருந்து.



(ப-ரை.) சிற்றாள் உடையான் - சிற்றாளுடையானது, படைக்கலம் - ஆயுதம் , மாண்பு இனிது - மாட்சிமைப்பட இனிது, நட்டார் உடையான் - சுற்றத்தாரை யுடையானது, பகை ஆண்மை - பகையையாளுந் தன்மை, முன் இனிது - மிக வினிது; பால் படும் - பால் மிகக் கறக்கும் , கன்று ஆ உடையான் - கன்றோடு பொருந்திய பசுவுடை யானது, விருந்து-, எ துணையும் - எல்லா வகையானும், ஆற்ற இனிது - மிக வினிது.

இளம் பருவத்தராகிய வீர ரில்வழிப் படைக்கலத்தாற் பயனின்மையின் , ‘சிற்றாளுடையான் படைக்கல மாண் பினிதே' எனவும், ‘ தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் ' எனத் தம்பி யொருவன் பரிந்தவாறு சுற்றத்தார் யாவரும் பரிந்து துணைசெய்தலின், ‘நாட்டாருடையான் பகை யாண்மை முன்னினிதே' எனவும் ;

"திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமற்
பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி "

(தேரையர்)

என்றபடி விருந்தைச் சிறப்பிப்பன் உருக்குநெய்யும் பெருக்கு மோருமாகலின் ‘எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படுங், கற்றாவுடையான் விருந்து எனவுங் கூறினார்.

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #39 on: September 13, 2011, 01:07:04 AM »
39
பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை1 கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.



(ப-ரை.) பிச்சை புக்கு - பிச்சைக்குச் சென்ற, உண்பான் (இரந்து) உண்பவன், பிளிறாமை- கோபியாமை, முன் இனிது - மிக வினிது; துச்சில் இருந்து - ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா - துன்ப மிக்கடையாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உற்றபேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு , அறன் ஒரூஉம் - அற வழியினின்று நீங்குதற்கேதுவாகிய , ஒற்கம் - மனத்தளர்ச்சி , இலாமை - இல்லாதிருத்தல்,இனிது -.

"இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி "

(குறள் - 1060)

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தொழிதலும் உண்டென்பதற்குத் தன் வறுமையே சான்றாத லறிந்து இரப்பவன் வெகுளாமை வேண்டுமென்பார் ‘பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே' என்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை

"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு "

(குறள் - 340)

என்பதனாலும்,

"நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற
னிலையுளே னவைதுரந் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி
வந்தனன் நின்குறிப் பறியேன்"

(சோணசைல - 3)

என்பதனானுங் கண்டு கொள்க.

மிக்க பேராசை நிரம்பும் வரையிற் பேரிடரும் ; நிரம்பாதாயிற் பேரிடரும் நிரம்பினும் முடிவிற் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு.

"சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு "

(குறள் - 31)

என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதுந் தந்து அந்தமிலின்பத் தழிவில் வீட்டையுந் தரும் அறத்தைக் கைவிடுதலடா தென்பர் , ‘உற்ற பேராசை கருதி யறனொரூஉ மொற்கமிலாமை யினிது என்றார். ‘ஒரூஉம் ' என்பது காரியத்தின்கண் வந்த பெயரெச்சம்
.
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இனியவை நாற்பது
« Reply #40 on: September 13, 2011, 01:12:27 AM »
40

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.


(ப-ரை.) பத்துக் கொடுத்தும் - பத்துப்பொருள் கொடுத்தாயினும், பதி இருந்து - உள்ளூரிலிருந்து, வாழ்வு - வாழ்தல் ,இனிது-; வித்து - விதைக் கெனவைத்த தானியத்தை, குற்று உண்ணா - குற்றியுண்ணாத, விழுப்பம் - சீர்மை, மிகவினிது -, பற்பல நாளும் - பற்பல நாட்களும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மையுடைய நூல்களை, கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது- மிக வினியது, இல் (வேறொரு செய்கை) இல்லை.

‘சில' என்னும் பொருளிற் ‘பத்து' என்னும் சொல்லை வழங்குதலுண்மையை, ‘பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி' (தேவாரம்) ‘ எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளுமாங்கே' (சிந்தாமணி, கனகமாலை - 41) என்பவற்றான்றிக.

‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்' என்றுரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.

தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச் செல்லுதலின் அது கொடுத்து ஊரின்கண் வாழ்தலே நன்மையா மென்பார், ‘பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே' என்றார். சாதி தருமந் தவறினார்க்கு அச் சாதியார்கூடித் தண்டம் விதித்தலும், அத் தண்டஞ் செலுத்தாராயின் நெருப்பு முதலியன வுதவாதும், வண்ணான் நாவிதன் முதலிய ஊர் வேலையாட்களைக் கட்டுப்படுத்தியும் அவர் அவ் வூரின்கண் இராதபடி செய்தன் முற்கால வழக்கென்க.

இனி , ‘அரசர்க்குச் செலுத்தும் உரிய இறைப்பொருளொடு பத்துப் பணங் கூட்டிக் கொடுத்தாயினும் உள்ளூர் வாழ்தலினிது' எனப் பொருளுரைப்பினும் அமையும் ஒன்றிற்குப் பத்தாகத் தாங்கா ,இறை கொள்ளுதல் கொடுங்கோன் மன்னன் செய்கையாகலானும், கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டிலுந் கடும்புலி வாழுங் காடு நன்றாகலாலும் ‘பத்து' என்பதற்குப் ‘பதின்மடங்கு இறை' எனப் பொருளுரைத்தல் பொருந்தா தென்க.

வித்தின்றேன் மேல்விளைவு மின்றாமாகாலின், ‘வித்துக் குற்றுண்ணா விழுப்பா மிகவினிதே' என்றார். உடலொடு அழியாது புண்ணிய பாவங்கள் உயிரொடு சென்று,

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"

(குறள் - 318)

என்றவாறு, எழுமையினும் துணைசெய்தலின், வாழ்நாட்களினொன்றேனும் பழுதுபடாவாறு கற்பவை கற்க வென்பார் ‘பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில்' என்றார்.

 

                                                ***முற்றும்***