பிறந்த போது குழந்தை
தவழ்ந்தபோது மழலை
பருவம் வந்தபோது கன்னி
மாலை இட்டபோது மனைவி
கருத்தரித்தபோது தாய்..
அன்பிக்கோர் தாய்மை
அவள் எண்ணமெல்லாம்
அவள் சிசுவில்
ஆனந்தமாய் இருந்தாள்
இதயம் அவளது உயிர்
இணைந்தால் ஓர் இசையில்
ஈகையில் ஓர் அழகு
ஈசனின் அருளில்
உணர்கிறேன் நான்
உறக்கம் இன்றி மாதா
ஊன் இன்றி உயிர்
ஊர்ஜிதமான நம்பிக்கை
எதிர்காலம் அவள் முன்
எழில் பொங்கும் புவி
ஏராளம் கனவுகள்
ஏக்கத்தோடு கருவுற்றாள்
ஐம்பூதங்கள் ஆசிர்வதிக்க
ஐப்பசியில் ஓர் சிசு
ஒவ்வொரு நொடியும்
ஒளி இவள் அகத்தில்
ஓசையில் இதயத்தின் துடிப்பு
ஓர் அணுவும் இல்லை
உவகையில் தந்தை
பௌவியமானது பெண்மை
தாய்மைக்குள்ளும் இன்னொரு
தாய்மையை உணர்தேன்
அதுவே நம் பூமிமாதா
உயிருக்கு மேலான அம்மா
அவள் ஆயுள் காலம் வரை
பிறப்பிட்கும் இறப்பிற்கும்
நம் இதழ்களில் "அம்மா"
ஏழேழு ஜென்மங்களிலும்
அதன் தாய்மை மாறாது
நம் தாய் நம் பூமிமாதா
நன்றி