Author Topic: செவ்வாய்தோஷம் உள்ள பெண், தோஷம் இல்லாத ஜாதகரை திருமணம் செய்யலாமா?  (Read 3002 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

செவ்வாய் தோஷம் குறித்து ஜோதிட நூல்களில் பல்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தை அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும். பொதுவாக செவ்வாய் இரத்தத்திற்கு உரிய கிரகம். ரத்த அணுக்களுக்கு உரிய கிரகம்.

ஒரு சொட்டு விந்தணுவுக்கு 10 சொட்டு இரத்தம் எனக் கூறப்படுகிறது. எனவே, உடல் உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடல் உறவின் தன்மையை அல்லது காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான்.

தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆடவனை திருமணம் செய்து வைக்கக் கூறுகிறோம்.

திருமணம் என்பது ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும். இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும்.

எனவே, இதுபோன்ற முரண்பாடுகள் உருவாவது எதில் என்று பார்த்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் தருணங்களில் இது அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வலியுறுத்துகிறோம்.

இதேபோல் ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.



செவ்வாய் தோஷ ஜாதகருக்கு திருமணம் தள்ளிப்போவதாக கூறப்படுவது குறித்து?

அப்படிக் கூற முடியாது. கடந்த 1979க்கு பின்னர் பிறப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். ஏனென்றால் அந்த காலகட்டத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் இடம் அப்படி மாறியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு வரன் கிடைப்பதில் சிக்கல் இருந்திருக்கலாம். அதற்குக் காரணம் அப்போது செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் குறைவு என்பதே.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் செவ்வாய் தோஷம் உள்ள வரன்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறுவதை நிச்சயம் ஏற்க முடியாது. தற்போது செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகருக்கு, வரன் கிடைப்பதில் வேண்டுமானால் தாமதம் ஏற்படலாம். தோஷம் இல்லாத ஜாதகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

செவ்வாய் தோஷம் உள்ள அமைப்பு: ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் உண்டு. இந்த அமைப்பு தற்போது பரவலாக உள்ளது. எனவே திருமணம் தடைபடுகிறது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.