ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 281
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/281.jpg)
விதையின் கை கோர்க்க இருக்கும் மரம்!
ஆதியிலிருந்து அடுத்த நாள் வரை! நான்மட்டுமில்லை... வா செல்வோம்! என்றவனை.
உச்சி வழியில் நீயிருக்க, ஊன்றுக் கோல் எனவே நான்னுனை நினைக்க! வழிக்காட்டியாய் வந்தவனே.
அன்பினால் உயர வைக்க! "நீ", ஆழத்தில் இருந்த "நான்"! நம்பிக்கையோடு, இன்னும் கொஞ்சம் மேலே வா, என்பவனே!
இன்று நிழல் தாரா கோபுரமே! என் கோவிலில், தேவனும் தானே!
உயிர் ரேகையை உன் பாா்வையிலிக்கும்! "ஆயிரம்" புத்தகங்களின், "அறிகுறிகள்" பிறர் பெற தா தா!
உழைத்து உழைத்தே! உன், முதலாளிக்கு "நிகராகி", அவரிடமும் போற்றுதல் மரியாதை சேர்த்த "கனியே"! விழுந்து மண்ணில், "மீண்டு-ம்" மீண்டு! நம் கரம் தீண்டவே வா, வா!
நீ! கேட்டுநான் மறுப்பதற்கு எதுவுமில்லை, என் வசம்! இக் கணமே உயிரைக்கேள்! அதுவும் உனக்கே உபயம்! தாத்தா!
பத்துபிள்ளை, நகம் போல் பெற்ற நீ! "செல்வம்" நீராய் நழுவி போக, உன் தாய்! கடலாகி தந்த முத்துக்கள்! இன்று பூ மாலையானதை! காண தாத்தா.
துப்பாக்கி! கை வீசி, வெற்றியுடன் கைகோத்து! பல போராடி, நம்பிள்ளையான என்தாயை, உன் வீட்டுக்கு அரசியாய்! "ராணி" என்றே பெயர் சூட்டிய "பட்டாளத்தானே"! நீயே.
வானத்தில் நானிருந்தாலும், "இதோ சந்திப்போம்"! என்றே, தூரத்தில் உன் "குரல்" கேட்குதே! அகமே.
விரைவிலென்று தினமும் போகுதே! விரல்கள் நனைக்க நொடிகள் ஆல் அணைப் போடுவதும் ஏனோ?
உன் எதிரொலியால் நானிருக்க! காலமெனும் "கருமுட்டை" நம்மைப் பிரிக்க, தொப்புள் கொடி
வேர்களாக நீளுதே, உறவே!
உன் போல், வாள்ளாய் உன்கையிலிருக்க! வரமொன்றுத்தாதா!
ஆம் ஆண்! என்பதனை மறந்தே சொல்கிறேன், உன்னை! "உண்மை" ஆகவே, விரும்பினேன்!
நம் உறவு மறித்த! "அந்த" நேரத்தில், என் கண்ணீரும் மரத்து! தூக்கில் தொங்கியது! கோடை மேகமே.
எனக்கும், "இதயம்" செதுக்க! நீ, உன் காதலிக்கு! எழுதியதுப் போல் ஓர் கடிதம் போடு! போதும்!
உன் வரலாறு "தண்டவாளமாய்" தந்ததற்கு! நன்றி!
நண்டுகள் சக்கரமாய் எனைச்சூழ்ந்திருக்கவே! வாழ்க்கை வாகனத்தில் நம்பிக்கையும்! ஓடி விட்டதே, காளையாய் "அஃதை" இன்றும் நான்! இழுத்திருக்க, என்! அச்சாணியும் உடைந்ததே!
தன்னைத்தான் தானே பிரிந்த, மரத்தின் விதை! போல் உன் அன்பு பேரன்! பயணத்திலிருக்கிறேன் வந்ததும், ஆங்கில வணக்கத்துடன்! கைகுலுக்கி, சந்திப்போம்!