நிற்கின்றாள் அவள் தன் கைகளில்
ரோஜாவை ஏந்தி என் வருகைக்காக
நிற்கின்றாள்.. மனம் வருந்தி நிற்கின்றாள்..
அவள் அவளின் மனம் முழுக்க
இருக்கும் ஒரு நினைவு 'என்னவன்'
திரும்பி வருவான் என்ற ஏக்கத்துடன்
ஒற்றை ரோஜாவும் வாடா.. இவளும்
வாடா முகத்துடன் சிறிது புன்னகையுடன்
ரோஜா பூவை கூட சுமக்க சக்திகள் இழந்த படி
நிற்கிறாள் என் வருகைக்காக நிற்கிறாள்
அவள் ஆயிரம் கனவுகளுடன்
தன் மனதை கொள்ளை அடித்த
கள்வனின் வருகைக்காக காத்திருக்கிறாள்
தன் ஆயுள் முழுவதும் காத்திருப்பேன் என்று
வைராக்கியத்துடன் காத்திருக்கிறாள்
ஆனால், இந்த உலகம் வழக்கம் போல
கல்யாணம் ஆகாமல் கன்னி பெண்
ரொம்ப காலம் தன் வீட்டில் இருந்தால்
என்ன எல்லாம் கதைகள் கட்டி விடுமோ?
அந்த எல்லாம் கதைகளையும் எதிர்த்து
போராடி கொண்டு தன் கணவனாகவே
என்னைக் கருதி என் வரவை எண்ணி..
எண்ணி நிற்கிறாள் ஒற்றை ரோஜாவுடனே
நான் சென்ற வழிதனில் விழி வைத்து
காத்துக்கொண்டிருக்கிறாள்
என் அன்பிற்கு உரிமையானவள்...