இந்த இதயம் துடிக்கும்
ஓசை கேட்கிறதா.. உன் பெயர் அதில்
கூண்டை விடு வெளி வந்த
பறவை போல என்னை விட்டு
வெளி வந்த போதும்
உன் ராகம் பாடுகிறதே...
அதை கையேந்தி நீ
தாங்குகையில் என்
அணுக்கள் உறைந்து
போவது ஏன்...
என்னை பிரிந்து வந்த
வலி கூட இல்லை
உன் அங்கம் அதை
தழுவதினால்...
உன் மூச்சுக் காற்றினால்
அதை மின்னச் செய்தாயடி...
பிரிந்து செல்ல வேண்டியவனை
அருகில் அழைத்து
உயிர் தந்தாயடி...
உன் இதயத்தை அதில்
இணைத்துக் கொடுத்தால்
என் ஆயுள் முடிந்தாலும்
உன் ஆயுள் வரை
உன்னுடன் இருப்பேனடி...