ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 334
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/334.jpg)
என்னவன்
பொன்னகைகள் வரதட்சணையாய் எதிர்பார்க்கும் உலகில்
உன் புன்னகைக்கு ஈடு எதுவென்பான் என்னவன்..
மலர் சூட குழல் தொடும் முன் மிச்சமின்றி சொச்சமின்றி முழுதாக
என் மனம் தொட்டவன் என்னவன்..
மரண காயங்களின் தழும்புகளை கூட சுவடின்றி
மறைய செய்யும் மருந்தாளன் என்னவன்..
மறுத்து மறந்து வாழ்ந்த வாழ்வின் இன்பங்களை புத்துயிரோடு
மீண்டும் மலரச்செய்தவன் என்னவன்...
சிரிப்புகளுக்கு மாத்திரமின்றி சிந்தனைகளுக்கும்
மறுஜென்மம் அளித்தவன் என்னவன்..
என்னோடு என் கனவுகளையும் நேசிக்கும்
பெண்ணியம் பேசும் கண்ணியவான் என்னவன்..
அன்பொன்றே மொழியாக கொண்டவன் என்
சர்வமும் அவனே என்றாகி போனவன் என்னவன்..
சலிப்பின்றி திகட்ட திகட்ட அன்பு செய்பவன்
உயிராகவும் உறவாகவும் மாறிப்போனவன் என்னவன்..
எதுகை மோனகையற்ற என் மொத்த கற்பனை
கிறுக்கல்களின் காரணகர்த்தா என்னவன் ..
மீள மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் தன்னுள்ளேயே
மீண்டும் மீண்டும் மூழ்க செய்கிறான் என்னவன்.