FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 26, 2023, 11:05:20 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: Forum on March 26, 2023, 11:05:20 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 309

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/309a.gif)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: SweeTie on March 27, 2023, 04:40:41 AM
சலவை செய்து தொங்கவிடப்பட்ட  அந்த  நிலவு
ஏளனமாய்    பார்த்து  சிரிக்கிறது 
இதே  படகில்  இதே நதியில்   இன்பமாய்  கதைபேசி
இரவுகளை  கடந்த  இரு  இதயங்கள்   
ஒருவரை ஒருவர்  பார்க்க பிடிக்காது
எதிர்த் திசைகளை  பார்த்து நிற்க
செல்லும்  திசையறியா ப்   படகு 
செய்வதறியாது  தவித்து நிற்பதுமேன்
'
அன்று வருடிச் சென்ற  குளிர் காற்று   இன்று 
அனலாய் கொதிக்கிறதே  !
அழகான  வெண்முகில்கள்    அசைவற்று நிக்கிறதே !
மேலும் கீழும்  ஆடும் படகு  அசைய மறுக்கிறதே ! !
இது  காதலில்   தெரியும் கானல்  நீ ரா?
காதலரின்    வேதனைத்   தீயா

அவள் காந்தள்  விரல்களை  தன்  விரல்களுடன்
பிணைத்து விளையாடிய  நாட்கள் எல்லாம் பொய்யா ?
காதோரம்  அசைந்தாடும்  அவள் லோலா க்கோடு 
கொஞ்சி விளையாடிய   பொழுதுகளும்   பொய்யா ?
இதழோடு இதழ் சேர்த்து  பரிமாறிய  முத்தங்கள்
காற்றோடு  காற்றாக  மறைந்ததும் கனவா ?
காதல் என்ற  ஒரு போர்வைக்கு.ள்  காலமெல்லாம்
தூங்கி எழும்    காதலரை  பிரிப்பது   விதியா இல்லை சதியா ?

எத்தனை இரவுகள்  இதே படகில்  பேசிமகிழ்ந்தோம் '
வானத்து விண்மீன்கள்  நடுவே  ஒளிரும்  மின்விளக்கு  அங்கே
என்  சப்த நாடிகளையும்  அதிரவைக்கும்  குலவிளக்கு  நீயே
மீட்டாத  என்  இதய வீணையை   மீட்டிய  என்னழகே !
சகியே !  என் இதயத்துள்  நுழைந்தவளே ! 
நீயின்றி  நானில்லை    நானின்றி நீயில்லை 
எத்தனை  எத்தனை  பசப்பு   வார்த்தைகள்   
காதல்   என்ற   கறுப்படைக்குள்   இத்தனையும் விஷமா?

காதல் எனும் மழையில்   காலமெல்லாம்   நனைய   
காத்திருக்கும்    காதலர்கள்     காரணம்  இன்றியே
காலையில்  மலர்ந்து  மாலையில்  கருகும் லர்க;ள் போல்   
காற்றோடு காற்றாக   கரைந்து  போவதுமேன் ?
நடு நடுவே  புகுந்து விளையாடும்  தேனீக்கள் போன்ற  பெஸ்ட் ஈக்களா?
இல்லை  தன்னையே   ஒருவழிபடுத்தும்   ஈகோக்களா ?
கண்ணில்லாத    காதலுக்கு   இரண்டுமே  விஷமிதான்.!!   


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: Charlie on March 29, 2023, 05:19:12 PM
நிறைந்த நீர் !
நிற்க மறுக்கும் அலைகள்!
நிலையற்ற தோணி !
ஒயா  காற்று!
ஓய்வெடுக்கும் சூரியன்  !
அவ்விரவில் அதிசயமாய் இரட்டை நிலா!!
அதில் ஒன்று என்னருகில்!

இமைக்க மறுத்தது விழி!
மறக்க தூண்டுது மதி !
ஏற்க மறுக்கும் மனம்!
நிழலை பிடித்து நிறுத்த முயல
மௌனமாய் தொலைந்தேன் நான்
அவள் விழிகளில் நிறைந்த சோகத்தில்!

இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்
உன் அன்பு தான் என் இதயம்
என்றால் எப்படி உனை மறப்பேனடி!

அர்த்தங்கள் தெரியாமலே
ஆசை கொண்டேனடி!
உன் மீது அந்தரங்கம் கடந்து 
காதல் கொண்டேனடி!

கண்மணியே!!!

உனக்குள் என் நினைவும்!
எனக்குள் உன் நினைவும்!
இருக்கும் வரை நமக்குள்
பிரிவு என்பது ஏதடி!

உன் நினைவுகளால்  !!
என் கண்களில் இருந்து
வழியும் ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
நீ தந்த வலிகளின் பரிசடி!

விடையறிய கேள்வி!
விடியலை  தேடியே என் பயணம் தொடருமோடி!!

உறங்கும் எனது
விழிகளுக்குள் உறங்காது
உயிர்த்திருக்கும் அவளின்
நினைவுகள் என்றும்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: தமிழினி on March 29, 2023, 06:24:06 PM
அடித்து செல்லும் அலைகளுக்கு நடுவே..
அருகில் இருந்தும்..
தூரமாய் நிற்கும் அவன்...

அரை அங்குலம் தொலைவில் இருந்த போதும்...
அரவே எட்டா நிலவினை போல் தெரிகிறான்..

கோவங்கள் ஏனடா கண்ணாளனே......

நிஜங்களில் உன் பிரிவினை கண்டே..

இந்த நினைவினில் உன்னை அனைத்திட வந்தேன்...

இங்கும் உன் பிடிவாதம் ஏனடா..

புரியவில்லை எனது பிரியம் உனக்குமா..?

நிஜங்களில் உன்னை தொடர முடியவில்லை என்றே..

நினைவுகளிலாவது உன்னுடன் வாழ்ந்து விட்டு செல்லலாம் என்று ஒவ்வொரு இரவும் ஊடலுன் உன்னை வந்து சேருகிறது என்
எண்ணஅலைகள்...

மேகங்களுக்கிடையே மறைந்து கிடக்கும் நிலவு

பகலில் தெரிய மறுத்தாலும் இரவில் நிச்சயம் வெளிவந்த சேரும்.

அந்திப் பொழுதில் தொடங்கிய இந்த பயணம்...? விடிவதற்குள் கரை சேர்ந்திடுமா இந்த கப்பல்...?

இப்படி ஒரு கேள்விகளுக்கு இடையே ..
என் நினைவுகள் என்றும் உனையே சேரும்...

அடைய முடியா ஆகாச நிலவாய் உன் பிடிவதாம்...

நிலளிலவது உன்னை மட்டுமே அடைந்துவிட வேன்டும் என்ற என் எண்ணம்...

குறித்துகொள்ளடா கண்ணாளனே...
உனக்கு நிகர் நீ மட்டுமே..
என் அழியா பொக்கிஷமே...
அன்பாய் வந்த வரமே..
என் அன்பு என்றுமே உன்னை மட்டுமே சேரும்...
சார்லி 😍
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: VenMaThI on March 29, 2023, 10:34:07 PM


நிலவை சூழும் மேகம் போல்
என்றும் உன் நினைவுகள் என்னை சுற்றி இருக்க
இதோ இங்கே தத்தலிக்கும் படகைப்போல்
என் மனம் தத்தலிக்கிறது  உன் நினைவுகளில்....

கண்ணா
உன் பாசத்தில் என் தகப்பனைக்கண்டேன்
உன் அன்பில் என் தமயனைக்கண்டேன்
உன் அரவணைப்பில் என் நண்பனைக்கண்டேன்
என்னை தாங்கும் உறவுகள் அனைத்தையும் உன்னுள் கண்டேன்


உன் தோல் சாயும் தருணம்
என் மனதின் பாரமோ மாயமாய் மறையும்
உன் கைகோர்க்கும் தருணம்
என் கவலைகள் அனைத்தும் பணிபோல் உருகும்
உன் முகம் பார்க்கும் தருணம்
என் முகம் மகிழ்ச்சியில் மிளிரும்
உன் உச்சி முகரும் தருணம்
என் முதல் பிள்ளை நீ என்ற எண்ணம் தோன்றும்
உன் மடி சாயும் தருணம்
என்னை ஈன்றவளின் தாலாட்டு நினைவில் வரும்
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின்  பொக்கிஷ தருணங்கள்
இப்பூமியில் வேறேதும் தேவை இல்லை
நீ என்னருகில் இருப்பதை விட...


உன் அன்பு என்னும் கடலில் மூழ்கிவிட்டேன்
அப்படியே சாக கூட சம்மதமே
ஆனால்
இன்னும் இன்னும் மூழ்க ஆசை....
அலையில் கால் நனைக்கும் குழந்தை போல்
ஒவ்வொரு நொடியும் பூரிக்கிறேன்
உன் அன்புத்துளிகள் என்மீது படுகையில்

என் மீதான உன் காதலை எண்ணி வியக்கிறேன்
அதை என்னுள் வைத்து பூட்டிக்கொள்வேன்
யாரும் களவாட முடியாதபடி.......
ஒரு நொடி கூட என்னை பிரியாதே
நொடியும் வருடமாய் நீளும் என் நேரம்
நீ என்னருகில் இல்லாதபோது...
ஆக கனவிலும் வேண்டாம் அந்த ரணம் எனக்கு..

என்னவனே இன்றும் என்றும் என்றென்றும்
என்னருகில் அல்ல என்னுள் நீ என்று உன்னிடம் சொல்ல ஆசை தான்
எப்படி சொல்வேன் என் மனதின் எண்ணங்களை
உன் முகம் காணும் பொழுதில்
மொழி மறந்த மழலையாகிறேன் ....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: MoGiNi on March 30, 2023, 01:12:20 AM
ஓர் நிலாக்காலத்தின்
நினைவுகளோடு
கலந்து கிடக்கிறது
மனது...

உனக்கென நான்
சுவாசித்த நாட்கள்
அழகானவை
எதிர்காலமற்ற அன்பில்
அயர்ந்து தூங்கிய
குழந்தை ஒன்று
அரைத் தூக்கத்தில் எழுந்து
திசையாறியாது விழிப்பதை ஒத்திருக்கிறது மனது...

நீண்ட ஒரு பயணத்தை
துணையின்றி கடப்பதை
போலிருக்கின்றது நகர்வுகள்...

"அன்பு "
வார்த்தை அளவில் கூட
வாழமறுத்துக் கனக்கிறது..
போகின்ற பாதையெங்கும்
சருகாய் மனது..
அது உன் நினைவுகளால்
நிரம்பிக் கனத்தபொழுதும்
உதிர்ந்துவிட்ட ஒன்றாகி
நகர்கின்றது...

இதயக் கூட்டின்
ஒவ்வொரு சுவர்களிலும்
உன் நினைவுகள்
உளி கொண்டு
உன் இன்மையை
செதுக்கி நகர்கின்றது..

வாழ்க்கை எனும் ஓடத்தில்
எதிரெதிர் பயணியாகிவிட்ட நமக்குள்
இனி இந்த இடைவெளி
நிரந்தரமாகி நகரட்டும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: HiNi on March 30, 2023, 11:22:09 PM
அந்த கடல் அலையின் ஓசையில்
இந்த வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
மினுமினுக்கும் குட்டி நட்சத்திரங்கள்
படர்ந்த மேக கூட்டங்கள்
நீயும் நானும் இரு துருவங்களாய் அன்பின் முனைவில்!!!

வெவ்வேரு கனவுகளுடன் இருவரும் இணைந்தோம்
சகிப்பு தன்மையை புதிதாய் ருசிக்க தொடங்கினோம்
எதிர்மறை எண்ணங்களோடு வாழ்ந்தோம்
இருவரின் குற்றங்களை சுட்டி காட்டுவதில் முதலிடம் பிடிக்க முயன்றோம்
தான் நினைத்ததை முடிப்பதில் அடங்காத பிடிவாதம் கொண்டோம்
முன் கோபத்தில் ஒருவரை ஒருவர் இழக்கும் நேரத்தில் மலர்ந்தது இந்த காதல்!!!

சின்ன சின்ன சண்டைகள் போட்டாலும்
ஒருவருக்குள் ஒருவர் மேல் எட்டி பார்க்கிரது அடங்காத காதலும்
"நீ முதலில் வருவாய் என அகங்காரத்தில்" நீயும் நானும் காத்திருந்தாலும்
வெற்றியோ நம் காதலின் பக்கம் தான் 🤗!!!

எதிர்மறை ஆயினும் நம் காதல் ஒருமையே
என்றும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல்
வின்னில் அடங்காத அன்போடு
மௌனமான செல்ல சண்டைகளோடு தவிக்கும் இரு இதயங்கள்❤!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 309
Post by: Madhurangi on March 31, 2023, 07:08:40 PM
கரங்கோர்த்து கதை பேசிய காலத்தில் 
வெட்கத்தில் மேகத்திரை உடுத்திய
அதே நிலா..
இன்றும் மறைகிறது
நம் கனத்த மௌனத்தின்
வெம்மையை தாங்காமல்

இரண்டடி தூரம் தான் நம்மிடையில்
உன் சலனமற்ற பார்வை சொன்ன செய்தியோ
என்றோ சென்று விட்டோம் மனதால்
பல காத தூரம்..

இடைவிடா உரையாடலில்
பல இரவுகளின் உறக்கத்தை தொலைத்த
நாம் இன்று திணறுகிறோம்..
எவ்வாறு தொடங்குவது
நம் பிரிவுரையின் முகவுரையை என்று..

உன் விழி அசைவில்
உன் எண்ண ஓட்டங்களை அறியும்
ஜாலம் அறிந்த நான்..
இன்று வேண்டுகிறேன் என் ஊகங்கள் பொய்யாக
கூடாதா என்று...

நிறைந்த அமைதியினை கெடுக்கும்
என் இதயத்தின் இரைச்சலை
தாங்க முடியாமல்..
மெல்ல தொடங்கினேன் நம் காதல்
பயணத்தின் இறுதி உரையாடலை..

காலகாலமாக காதலின் பிரிவிலக்கணத்தின்
அதே பொருளுரையை கொண்டு
பிரிகிறோம்..
இதுவும் உன் நன்மைக்காகவும்
என் நன்மைக்காகவும் என்று..