Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 77898 times)

Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #45 on: November 11, 2011, 10:44:13 PM »
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
 சொல்லுதல் வல்லார்ப் பெறின்

கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.



-------விடுஒன்றோ------நன்னெஞ்சே
யானோ ------------ விரண்டு

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #46 on: November 16, 2011, 11:40:53 AM »
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

....... ஆற்றல் ......... போற்றுவார்
போற்றலுள் ..........     ..........


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #47 on: November 16, 2011, 11:11:44 PM »
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.


...... ஆய ...............   ..........
நற்றாள் ................. எனின்


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #48 on: November 17, 2011, 01:52:57 PM »
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



    ------- பெருங்கடல் -------------
    ------------ அடிசேரா --------
--

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #49 on: November 18, 2011, 02:04:58 AM »
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது


.......  உலகம் வழங்கி  .........
தான்அமிழ்தம் .......   ...........


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #50 on: November 18, 2011, 12:34:40 PM »
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்
அமிழ்தம் என்றுணரற் பாற்று


உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


------------ ஆணிஅஃ தாற்றாது
---------------------- பொறுத்து.


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #51 on: November 18, 2011, 01:04:51 PM »
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

.................  ............... ................ வியனுலகத்து
..........   உடற்றும் பசி

Offline Anaamika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #52 on: November 22, 2011, 05:52:41 PM »
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி



.............................ஞாலத்து
....................... கண்டார்கண் இல்.

Offline micro diary

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #53 on: November 22, 2011, 06:14:14 PM »

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.


......   தழீஇய   .......... மலர்தலும்   
........   இல்ல   .......


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #54 on: November 22, 2011, 08:39:20 PM »
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு


வருமுன்னர்க் ...............   ..............  .........
வைத்தூறு ..... கெடும்.


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #55 on: December 06, 2011, 04:32:49 PM »
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்


முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.



  ------------செய்யா --------- செல்வம்
   ------------------------கெடும்.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #56 on: December 10, 2011, 04:22:17 PM »
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.


வருமுன்னர்க் ........  .......... எரிமுன்னர்
வைத்தூறு .......  .......


Offline Malligai

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #57 on: February 09, 2012, 02:44:35 PM »
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

Offline Malligai

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #58 on: February 09, 2012, 02:47:51 PM »
செய்வானை .............. காலத்தொடு
எய்த ................

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #59 on: February 10, 2012, 12:32:45 AM »
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்.


எனைவகையான் ...............  .......... வினைவகையான்
........... ........... பலர்.