பள்ளிப்பருவமதில்
பட்டபடிப்புக்கு சென்றால் மாறும் என்றெண்ணி..
கல்லூரி காலத்தில்
கணவன் வீடு சென்றால் மாறும் என்றெண்ணி..
மணமானதும்
மகப்பேறு காலமது முடிந்தால் மாறும் என்றெண்ணி..
மகனும் மகளும் வளர்ந்தால் மாறும் என்றெண்ணி..
பாதி வாழ்க்கை கடந்தபின்னும்
இனியாவது மாறும் என்றெண்ணி..
நாம் நினைக்கும் மாற்றம் அனைத்தும் கனவாய் போக
இந்த வாழ்க்கை தரும் மாற்றமே நிலையாய் நிற்க
ஆசைகள் அனைத்தும் அசையாமல்
கல் போல என்றும் கற்பனையாய் மட்டுமே...
மனமே இனியாகிலும் புரிந்துகொள்..
மனிதன் வாழ ஆசை மட்டும் இருப்பின்
அது அர்த்தமற்றதாகும்
ஆசை அனைத்தையும் அனுபவிக்க
சிறிதளவு கொடுப்பினையும் தேவை...
என்ன பெரிய கொடுப்பினை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
மழலையாய் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்ததும் ...
நிசப்ததமான இரவில் நிம்மதியான நித்திரையும் ...