எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தோழி என்னும் உறவாள்
என்னை கவர்ந்தவளே!
தோள் கொடுக்க தோழன் மட்டுமல்ல நல்ல தோழி இருந்தாலும் எட்டிப் பிடிக்கலாம் இந்த வானத்தை
என்று எனக்கு உணர்த்தியவளே!
என் முகம் கண்டு என் குறை தீர்த்திடுவாள்!
என் பசியை அறிந்து உணவு படைத்திடுவாள்!
என் சோகம் கண்டு தன் தோள் தந்திடுவாள்!
என் வெற்றி கண்டு முகம் மலர்ந்திடுவாள்!
என்னை எவரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை, எந்த சூழலிலும் கைவிட்டதும் இல்லை!
துவண்டு விழும்போதெல்லாம் தைரியம் கொடுத்தவள்!
இன்ப துன்பங்கள் அனைத்திலும் என் உடன் இருந்தவள்!
நான் கண்ணீர் சிந்தும் முன்பே அதை துடைக்க கரம் கொடுத்தவள்!
எட்டா உயரங்களை எட்ட வேண்டும் நீ என்று ஊக்கம் அளிப்பவள்!
உன் அன்பிற்கு முன் இந்த வானமும் சிறியது தான் தோழியே!
நம்மை தவறாக பேசிய இந்த உலகிற்கு தெரியுமா நீ எனக்கு இன்னொரு தாய் என்று!
உன் அன்பிற்கு முன் இந்த வானமும் சிறியது தான் தோழியே!
என் ஆயுள் உள்ளவரை உன் நட்பை சுமந்து வாழ்வேன்!
நீ கலங்காமல் வாழ அந்த வின்மீனையும் விலைபேசுவேன் என் உயிர் தோழியே!